வெயில் அதிகம் : 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே செல்ல வேண்டாம் - ஆணையர் வேண்டுகோள் !!!

வெயில் அதிகம் : 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே செல்ல வேண்டாம் - ஆணையர் வேண்டுகோள் !!!

சென்னை லயோலா கல்லூரி மைதானத்தில்  நடைபெற இருக்கும் ஊடகங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியை சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். பின்னர் கிரிக்கெட் விளையாடி வீரர்களுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்தார். 

மேலும் படிக்க | பொது இடத்தில் தேவாலயம் கட்டும் பணிகள்: "ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு"!

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், சென்னையில் வெயில் தாக்கத்தை தவிர்க்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். தமிழ்நாடு அரசு கொடுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக கடைபிடிக்கின்றோம் என்றார். 

மேலும் படிக்க | கள்ளச்சாராய பலி; பாஜகவினர் இன்று ஆா்ப்பாட்டம்!

தொடர்ந்து பேசிய அவர், வெயில் நேரத்தில் குறிப்பாக 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே செல்ல வேண்டாம். மாநகராட்சி அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களிலும் ors இருப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சாலை ஒரே உள்ள கடைகளுக்கு நிழற்குடை இருப்பதை உறுதி செய்துள்ளோம். தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாநகராட்சி பள்ளி தரமான கல்வி கற்றலை கொடுத்துள்ளது. தொடர்ந்து மாணவர்கள் இடை நில்லாமல் கல்வி கற்க மாநகராட்சி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.