மாணவி அளித்த பாலியல் தொல்லை: உடற்பயிற்சி கல்லூரியின் முதல்வர் கைது

மாணவி அளித்த பாலியல் தொல்லை:  உடற்பயிற்சி கல்லூரியின் முதல்வர்  கைது

பாலியல் தொல்லை

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ உடற்பயிற்சி கல்லூரியின் முதல்வராக இருந்து வருபவர் ஜார்ஜ் ஆபிரகாம் (50) இவர் இந்த கல்லூரியில் படித்து வரும் மாணவிகளுக்கு பல்வேறு விதத்தில் பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்து வந்தது. கடந்த ஆண்டு மே மாதம் இதே கல்லூரியில் படிக்கக்கூடிய மாணவி ஒருவர், வாட்ஸ் அப் மூலம் தன்னிடம் ஆபாசமாக பேசி வருவதாகவும் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் இவர் மீது புகார் அளித்தார்.

இந்த புகாரை விசாரணை செய்த சைதாப்பேட்டை மகளிர் காவல் நிலைய போலீசார் கல்லூரியின் முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் மீது பெண் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகள் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் கல்லூரியின் முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் முன்ஜாமீன் பெற்றார் அதன் பின்னர் சிறிது நாட்களிலேயே மீண்டும் கல்லூரிக்கு திரும்பினார்.

மேலும் படிக்க |இன்ஃப்ளூயன்ஸா தொற்று: அனைத்து மாநில அரசுக்கும் மத்திய சுகாதாரத்துறை செயலர் கடிதம் 

இந்த நிலையில் இந்த கல்லூரியில் படித்து வரக்கூடிய 17 வயது மாணவி ஒருவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சிகளை மேற்கொண்டு இருந்தபோது, அங்கு வந்த கல்லூரியின் முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கல்லூரியின் தாளாளரிடம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் புகார் அளித்திருக்கிறார்.

மேலும் படிக்க | ஆளுநருக்கு எதிராக பேனர்...அகற்றக்கோரியதால் இருதரப்பினரிடையே தள்ளு முள்ளு

இது குறித்து விசாரணை நடத்திய தாளாளர், மாணவி கூறிய புகார் உண்மை என தெரிய வரவே சைதாப்பேட்டை காவல் நிலையத்திற்கு புகார் அனுப்பி இருக்கிறார். இது குறித்து விசாரணை நடத்திய சைதாப்பேட்டை மகளிர் காவல் நிலைய போலீசார், சம்பந்தப்பட்ட மாணவியிடம் புகாரை பெற்று, விசாரணை நடத்தி கல்லூரியின் முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் மீது போக்சோ சட்டத்தின் கீழ்  வழக்கு பதிவு செய்து கல்லூரியின் முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாமை கைது செய்தனர்.