க்ரைம்

“கள்ளக்காதலால் கொல்லப்பட்ட பெண்” - நூடுல்ஸ் கொடுத்து கொலை செய்த காதலன்.. பாலித்தீன் கவரில் தனித்தனியாக இருந்த காதலியின் உடல்!

ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வண்டியை நிறுத்தி இருவரும் பரோட்டா மற்றும் நூடுல்ஸ் சாப்பிட்டுள்ளனர்...

Mahalakshmi Somasundaram

உத்திரபிரதேச மாநிலம், கௌதம புத்த மாவட்டத்தில் உள்ள நொய்டா பகுதியை சேர்ந்தவர் பிரீத்தி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கைலாஷ் என்பவருடன் திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ள நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. எனவே பிரீத்தி கணவரை பிரிந்து தனது இரண்டு மகள்களுடன் தனியாக வீடு எடுத்து அதே பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வாழ்ந்து வந்தார்.

அப்போது பிரீத்திக்கு அதே பகுதியை சேர்ந்த மோனு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர் வேன் டிரைவராக உள்ள நிலையில் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இருப்பினும் மோனோவிற்கும் பிரீத்திக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் பிரீத்தி மோனோவை தன்னை திருமண செய்துகொள்ள வற்புறுத்தியுள்ளார்.

மேலும் அவ்வாறு திருமணம் செய்து கொள்ளாவிட்டால் “நீ என்னுடன் தொடர்பில் இருப்பதாக உனது மனைவி மற்றும் பெற்றோர்களிடம் தெரிவித்து விடுவேன்” என மிரட்டியுள்ளார். மேலும் அதற்கு மேனோ இவ்வாறு செய்தால் நான் உனது மகள்களை பற்றி தவறாக ஊரில் சொல்லிவிடுவேன் என கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து பிரீத்தி திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மோனோ அவரை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார்.

அதன்படி பிரீத்தியை தனது வண்டியில் வெளியில் அழைத்து சென்ற மோனோ கடையில் நூடுல்ஸ் மற்றும் பரோட்டா வாங்கிக்கொண்டு ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வண்டியை நிறுத்தி இருவரும் பரோட்டா மற்றும் நூடுல்ஸ் சாப்பிட்டுள்ளனர். பின்னர் பிரீத்தி மீண்டும் மோனோவிடம் திருமணத்தைப் பற்றி பேசத்தொடங்கியுள்ளார், இதனால் ஆத்திரமடைந்த மோனோ தனது வண்டியில் மறைத்து வைத்திருந்த கோடரியை எடுத்து பிரீத்தியை சரமாரிய வெட்டியதாக சொல்லப்படுகிறது.

இதனை தொடர்ந்து பிரீத்தியின் உடலை கை, தலை என தனித்தனியாக வெட்டி தலை மற்றும் கைகளை ஒரு பாலித்தீன் கவரிலும், உடலை மற்றொரு பாலித்தீன் கவரிலும் கட்டி கால்வாயில் வீசிச் சென்றுள்ளார். பின்னர் பாலித்தீன் கவரில் மனித உடல் பாகங்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மோனோவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.