சென்னை, திருவொற்றியூர் மணலி புதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் 37 வயதுடைய முத்துக்குமார். இவர் மணலி மாநகராட்சி மண்டலத்தில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த குணசுந்தரி என்ற பெண்ணுடன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருவரும் தனியாக வீடு எடுத்து வசித்து வந்த நிலையில் ஒரு வருட முன்பு மனைவி இறந்து தனியாக வசித்த உறவினர் சதீஷ்குமார் என்பவரை முத்துக்குமார் அழைத்து வந்து தனது வீட்டில் தங்க வைத்திருக்கிறார்.
இந்நிலையில் முத்துக்குமார் தினந்தோறும் காலை வேலைக்கு சென்றுவிட்டு மீண்டும் மாலையில் தான் வீடு திரும்புவார் என சொல்லப்படுகிறது. இதற்கிடையில் வீட்டில் தனியாக இருந்த குணசுந்தரிக்கும், சதிஷ்குமாருக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி அடிக்கடி தனிமையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் கணவனை விட்டு காதலனுடன் வாழ நினைத்த குணசுந்தரி கடந்த 20 நாட்களுக்கு முன்பு பெரியபாளையத்தில் உள்ள அம்மா வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் குணசுந்தரி தனது கள்ளக்காதலன் சதீஷ்குமாருடன் வீட்டை விட்டு வெளியேறியது தெரிவந்தது. இதனால் மனமுடைந்து விரக்தியில் இருந்த முத்துக்குமார் இன்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தான் இறப்பதற்கு முன்பு செல்போனில் ஆடியோ பதிவு செய்தும், கடிதம் எழுதி வைத்தும் “எனது மரணத்திற்கு காரணம் மனைவி குணசுந்தரியும் சதீஷ்குமாரும் தான்” என தெரிவித்துள்ளார்.
தன்னை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மணலி காவல் நிலைய போலீசார் இறந்த முத்துக்குமாரின் உடலை கைப்பற்றி ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் இது குறித்து சட்டரீதியாக எவ்வித நடவடிக்கை எடுக்க முடியாது என போலீசார் புகாரை வாங்க மறுத்ததால் பிரேத பரிசோதனை முடித்து அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து வீட்டிற்குகொண்டுவரப்பட்ட முத்துக்குமார் உடலை வழியில் மடக்கி பொன்னேரி நெடுஞ்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மணலி காவல் நிலைய உதவி ஆணையர் விவேகானந்தன் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு புகார் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் பொன்னேரி நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் முத்துக்குமார் எழுதி வைத்த கடிதத்தில் “என் மனைவி வேற என்ன கரணம் சொல்லி இருந்தாலும் நான் இந்த முடிவை எடுத்திருக்க மாட்டேன் ஆனால் என்னிடம் நல்ல முறையில் நடந்து கொண்டு இப்படி செய்தது என்னால் தங்க முடியவில்லை, கடந்த (ஏப் 2) ஆம் தேதி கூட நாங்கள் ஒன்றாக குளித்து உடலுறவு கொண்டோம், குண பிறகு இரண்டு நாட்களிலேயே என்னை ஏமாற்றிவிட்டால்” என எழுதி வைத்திருப்பது முத்துக்குமாரின் உறவினர்கள் மீது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பு: மன அழுத்தம் அல்லது தற்கொ*லை எண்ணம் ஏற்பட்டால், அரசு உதவி மையமான 104 அல்லது சினேகா உதவி மையம் 044-24640050 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்