samuvel and jose 
க்ரைம்

கணவன் - மனைவி சண்டை..! கழுத்தை அறுத்து தண்ணீர் வடிகாலின் அருகே போட்ட கொடூரம்!

கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி சண்டை நடந்து வந்ததாக

Anbarasan

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம், பகுதியைச் சேர்ந்தவர் ஜோஸ்பின் மேரி (57) ,இவரது கணவர் பெயர் மரிய சாமுவேல் வயது 61, இவர் ஆடு வளர்த்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஒருவர் ஆப்பிரிக்காவிலும் மற்றொருவர் பெங்களூருவிலும் பணிபுரிந்து வருகின்றனர்.

கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி சண்டை நடந்து வந்ததாக அருகில் உள்ளவர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு இருவருக்கும் இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் கணவர் சாமுவேல் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.ஜோஸ்பின் இரண்டாவது மகன் பலமுறை கால் செய்து எடுக்காததால் அவரின் மாமாவிற்கு அழைத்து வீட்டிற்கு சென்று பார்க்கும்படி தகவலளித்துள்ளார்.

இந்நிலையில் வீட்டிற்கு வந்த அவர், ஜோஸ்பின் வீட்டில் கட்டியிருந்த ஆடுகள் தண்ணீர் இல்லாமல் கத்துவதை கண்டு வீட்டுக்குள் சென்று பார்த்த போது இருவரும் இல்லை. தேடும் போது அருகில் உள்ள மழை தண்ணீர் வடிந்து செல்லும் வடிகாலின் அருகே, ஜோஸ்பின் மேரி கழுத்து அறுக்கப்பட்டு கிடந்துள்ளார்.இதனை கண்டு ஜோஸ்பினின் தம்பி சத்தமிட்டுள்ளார். உடனே அருகில் உள்ளவர்கள் இதை கண்டு சாயர்புரம் காவல் நிலையத்துக்கு தெரிவித்தனர். காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார்.

ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி ஜமால் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து. உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டிஎஸ்பி வீட்டை ஆய்வு செய்து அருகில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினார். மேலும் தலைமறைவான ஜோஸ்பின் மேரியின் கணவர் மரியசாமுவேலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்