kavin honour killing  
க்ரைம்

கவின் ஆணவக் கொலை வழக்கு..! மூன்றாவது குற்றவாளியான சுர்ஜித்தின் தாய்க்கு நீதிமன்றம் பிடிவாரண்ட்!

கவினின் காதலியின் தந்தையான எஸ்.ஐ சரவணன், சகோதரர் சுர்ஜித் மற்றும் இவர்களது உறவினர் ஜெயபால் ...

மாலை முரசு செய்தி குழு

இந்தியா என்னதான் வளமான ஒரு நாடாகவும் உலக அளவில் வலிமையான ராணுவத்தை கொண்டிருந்தாலும், இந்தியாவின் மிகப்பெரிய இழுக்குகளில் ஒன்று சாதிய கொடுமை. ஒவ்வொரு நாட்டிலும் எளியோரை வலிமை படைத்தோர் நசுக்கி அவர்களின் உழைப்பை சுரண்டும் போக்கு தொடர்ந்து வருகிறது. இந்த ஏற்றத்தாழ்வை போக்கத்தான் ஜனநாயகம் அவசியம் எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்ற போக்குதான் சரியானது. ஆனால் இந்தியா தன்னை ஜனநாயகமான ஒரு நாடக அறிவித்துக்கொண்டாலும் இந்தியா ஜனநாயக நாடு கிடையாது. சமூகத்தில் சமத்துவம் உருவாகாத நாடு தன்னை ஒருபோதும் ஜனநாயக நாடு என்று அழைத்துக்கொள்ள முடியாது. ஒருவேளை அப்படி ஒரு நாடு தன்னை அறிவித்துக்கொண்டால் அது மிகப்பெரும் ஒரு முரண்.

இந்தியா 77 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த முரணிலேயே தான் தொடர்ந்து வருகிறது. 77 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் இன்னமும் மாறாமல் இருக்கக்கூடிய அவலம் பிறப்பால் உயர்வுதாழ்வு கருதுவது.

ஆனால் எல்லாவித ஏற்றத்தாழ்வுகளையும் உடைக்க கூடிய வல்லமை காதல் ஒன்றுக்குத்தான் இருக்கிறது, நிறம், மதம், இனம் மொழி என எந்த தடைகளும் அன்பு கொண்ட நெஞ்சத்திற்கு தெரியாது. ஆனால் அந்த காதலை கைக்கொள்ள முயலும் ஒவ்வொருவரும் சமூகத்தின் முன் குற்றவாளியாக்கப்படுகின்றனர் இல்லையெனில் கொல்லப்படுகின்றனர். எத்தனை விதமான ஆணவப்படுகொலைகளை நாம் பார்த்திருப்போம். பெற்றபிள்ளைகளை கொள்ளும் அளவிற்கு சாதி ஊறிப்போன ஒரு சமூகம்தான் இந்திய சமூகம்.

கவின் படுகொலை!

பாளையங்கோட்டை கே.டி.சி நகரை சேர்ந்தவர் சரவணன் ராஜபாளையம் பட்டாலியனிலும், இவரது மனைவி மணி முத்தாறு பட்டாலியனிலும் வேலை பார்த்து வருகின்றனர்.  இவர்களது மகன் சுர்ஜித். இவர்தான் கவினை குத்தி கொலை செய்துள்ளார்.

கரணம் சுர்ஜித் அக்காவும், கவினும் பலகாலமாக காதலித்து வந்துள்ளனர். ஆனால் தனது அக்காவோடு பேசக்கூடாது என பலமுறை கவினை எச்சரித்துள்ளனர். இந்நிலையில் கவின் தனது தாத்தாவை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்போது கவினை சுர்ஜித் எச்சரித்துள்ளார். அப்போது அவர் ‘பேசுவதை நிறுத்த முடியாது’ என்று சொல்லியிருக்கிறார். இந்த நிலையில்தான்,  அவரின் முகத்தில் மிளகாய் பொடி போட்டு சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளார்.

தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த ஆணவக் கொலை வழக்கில் முக்கிய திருப்பமாக, இவ்வழக்கின் 3 -வது முக்கியக் குற்றவாளியான  சுர்ஜித்தின் தாயாரைக் கைது செய்யுமாறு நெல்லை மாவட்டம் இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டு, பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

காதல் விவகாரத்தில் நடந்த இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக, கவினின் காதலியின் தந்தையான எஸ்.ஐ சரவணன், சகோதரர் சுர்ஜித் மற்றும் இவர்களது உறவினர் ஜெயபால் ஆகியோர் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு, போலீசாரிடம் இருந்து சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு தீவிர விசாரணை நடந்து வருகிறது.

இந்த வழக்கில் எஸ்.ஐ சரவணன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த 3 மனுக்களையும் நெல்லை பி.சி.ஆர் கோர்ட் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்னும் கைது செய்யப்படாத நிலையில் இருப்பதை அறிந்த நீதிமன்றம், “நீதிமன்றத்தின் சம்மனுக்குப் பதிலளிக்காமல், விசாரணைக்கு ஒத்துழைக்காமல் இருந்த காரணத்தால், சுர்ஜித்தின் தாயாரை  உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரி பிடிவாரண்ட்  பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு, வழக்கில் அடுத்த கட்ட நடவடிக்கையைத் தீவிரப்படுத்துவதாகவும், விரைவில் சுர்ஜித்தின் தாயார் கைது செய்யப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.