திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வில்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் 45 வயதுடைய கோபாலகிருஷ்ணன். இவர் குடி போதைக்கு அடிமையாக அடிக்கடி வீட்டில் பிரச்சனை செய்து வந்ததால் இவரது மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பாக தற்கொலை செய்து இறந்த நிலையில் கோபாலகிருஷ்ணன் தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. அதே போல பரமேஸ்வரி என்பவர் தனது கணவர் உயிரிழந்த நிலையில் மகன் மனோஜ் குமார் மற்றும் இரண்டு மகள்களுடன் வாழ்ந்து வருகிறார்.
மனோஜ் குமார் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் கடையில் பணிபுரிந்து வந்த நிலையில் கோபாலகிருஷ்ணனுக்கு பரமேஸ்வரிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி அடிக்கடி தனிமையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் மனோஜ் குமார் அதே பகுதியில் வேலை செய்வதால் அவ்வப்போது இடையில் வீட்டிற்கு வந்து செல்லும் போது தாயின் கள்ளக்காதலை அறிந்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.
மேலும் பரமேஸ்வரி மற்றும் கோபாலகிருஷ்ணனை கண்டித்திருக்கிறார். ஆனால் இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 8.30 மணி அளவில் கோபாலகிருஷ்ணன் பரமேஸ்வரி வீட்டிற்கு சென்ற நிலையில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது அப்போது கோபாலகிருஷ்ணன் பரமேஸ்வரியை தகாத வார்த்தைகளால் திட்டியதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் அங்கு வந்த மனோஜ் குமார், தனது தாயை அடிக்க சென்ற கோபாலகிருஷ்ணனை பார்த்து ஆத்திரமடைந்திருக்கிறார். பின்னர் “யார் வீட்டில் வந்து யார் அதிகாரம் பண்றது” என கேட்டு அருகில் கிடந்த பெரிய கல்லை கொண்டு கோபாலகிருஷ்ணன் தலையில் பலமாக தாக்கியதில் கோபாலகிருஷ்ணன் சம்பவ இடத்தில் தலை நசுங்கி பலியானார். இதனை பார்த்த மக்கள் கொடைக்கானல் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கொடைக்கானல் காவல்துறையினர் உயிரிழந்த கோபாலகிருஷ்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய மனோஜ் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாயுடன் தகாத உறவில் இருந்த நபரை மகன் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.