44 வயதான யூசெல் எரி இல்மாஸ், 2025 அக்டோபரில், நகரின் மிஷன் மாவட்டத்தில் உள்ள ஒரு கிளப்பில் இருந்து, பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரது சகோதரியும் நள்ளிரவில் தங்களின் வீட்டிற்கு செல்ல ஊபரை அழைத்துள்ளனர். ஆனால் அவர்கள் தவறுதலாக யூசெல் எரி இல்மாஸை ஊபர் ஓட்டுநர் என்று நினைத்து அவரது காரில் இருவரும் எறியுள்ளனர். இவரும் அவர்களை வைத்து வாகனத்தை இயக்கியுள்ளார்.
முன் இருக்கையில் அமர்ந்திருந்த சகோதரியை எர்வில்மாஸ் முத்தமிட முயன்றதாகவும், ஆனால் அவர் அந்த முயற்சியை நிராகரித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் சேருமிடத்தை அடைந்த பிறகு, முன்னால் இருந்த சகோதரி காரிலிருந்து இறங்கியுள்ளார். ஆனால் அவர் பின்னால் இருந்த சகோதரியை எழுப்புவதற்குள், எர்வில்மாஸ் காரை ஓட்டிச் சென்றுவிட்டார் என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து, இந்த விஷயத்தை பற்றி தெரிவிக்க கீழே இறங்கிய அந்த சகோதரி காவல்துறைக்கு அழைத்துள்ளார். பின்னர், எரில்மாஸ் தனது அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தின் வாகன நிறுத்துமிடத்திற்குள் வாகனத்தை ஓட்டி வந்து, அதிலிருந்து இறங்கி பாதிக்கப்பட்டவருடன் பின் இருக்கையில் ஏறுவதைக் காட்டும் காணொளிக் காட்சிகளை அதிகாரிகள் பெற்றுள்ளனர். அவர்கள் இருவரும் உள்ளே இருந்தபோது அவர் கதவைப் பூட்டினார்.
பல மணிநேரங்களுக்குப் பிறகு, பாதிக்கப்பட்ட பெண் "பயத்துடனும் குழப்பத்துடனும்" கண்விழித்தபோது, எரில்மாஸ் தன் மீது இருப்பதை அவர் உணர்ந்துகொண்டார். அதன்பிறகு அவர் எரி இல்மாஸின் குடியிருப்பிலிருந்து தப்பி ஓடி, உதவிக்காக தன் சகோதரியை அழைத்துள்ளார்.
சுயநினைவற்ற நபரை பாலியல் வன்புணர்வு செய்தல் மற்றும் பாலியல் வன்புணர்வு செய்யும் நோக்கத்துடன் தாக்குதல் நடத்துதல் ஆகிய இரண்டு குற்றங்களுக்காக எரி இல்மாஸை நடுவர் குழு குற்றவாளி எனத் தீர்ப்பளித்தது. மேலும், எரி இல்மாஸ் காவலில் உள்ளார், மேலும் அவருக்கு வருகின்ற ஜூன் 18 அன்று தண்டனைத் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.