Rodney Johnston Rodney Johnston
க்ரைம்

"30 ஆண்டுகளாக 1,000 ஆண்களால் பாலியல் வன்கொடுமை!" பலமணி நேரம் வரை நீடித்த கொடுமை - '30,000 வீடியோக்கள்' கண்டெடுப்பு

வாரத்திற்கு ஐந்து இரவுகள் பல ஆண்களுடன் பாலியல் உறவு கொள்வதற்காக அந்தப் பெண் "வெளியே செல்ல" கட்டாயப்படுத்தப்பட்டதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது.

Vinvizhi Leninton

மூன்று தசாப்த கால இடைவெளியில் ஒரு பெண்ணை '1,000 ஆண்கள் வரை' பாலியல் உறவு கொள்ளும்படி கட்டாயப்படுத்திய குற்றத்திற்காக, 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ரோட்னி ஜான்ஸ்டன், தொலைதூர கிராமப்புறப் பகுதிகளிலும், ஹோட்டல்கள் மற்றும் வாகனங்களிலும் ஆண்களுடன் பல்வேறு பாலியல் செயல்களில் ஈடுபடுமாறு அப்பெண்ணை மிரட்டியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோதல்கள் பெரும்பாலும் பல மணிநேரம் நீடித்ததாகவும், ஒருநாளில் 15 ஆண்கள் வரை ஈடுபட்டதாகவும் நடுவர் குழுவிடம் தெரிவிக்கப்பட்டது.

நோர்போக்கில் உள்ள ஸ்டார்ஸ்டனைச் சேர்ந்த 67 வயதானவர் ஜான்ஸ்டன். தனது வக்கிரமான பாலியல் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள ஒரு மோசமான செயலை செய்துள்ளார். அந்தத் துன்புறுத்தலை ஆவணப்படுத்தும் 30,000-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் அடங்கிய தொகுப்பை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். வாரத்திற்கு ஐந்து இரவுகள் பல ஆண்களுடன் பாலியல் உறவு கொள்வதற்காக அந்தப் பெண் "வெளியே செல்ல" கட்டாயப்படுத்தப்பட்டதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது.

வெளியே செல்வது என்பது, அவர் முன்பின் தெரியாதவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். அந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து தனக்கு அருவருப்பாக இருந்ததாகப் பாதிக்கப்பட்டவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். மேலும், ஜான்ஸ்டன் அந்த பெண்ணிடம் ஒத்துழைப்பு இல்லை என்றாலும் அவரை மிரட்டி செய்யவைத்துள்ளார். காவல்துறையிடம் அளித்த அந்த பெண்ணின் வாக்குமூலத்தில், பல தசாப்தங்களாகத் தொடர்ந்த கொடூரமான துன்புறுத்தல்கள் அவர் எவ்வாறு 'பயன்படுத்தப்பட்டதாகவும்' 'பேரச்சத்தில்' ஆழ்த்தியதாகவும் பாதிக்கப்பட்டவர் விளக்கினார்.

ஜான்ஸ்டன், 1994 முதல் 2024 வரையிலான 30 ஆண்டு காலம் உள்ளடக்கிய பல குற்றங்களுக்காகக் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டார். ஆறு வாரங்கள் நடந்த விசாரணை முழுவதும், ஜான்ஸ்டன் அந்தப் பாலியல் உறவுகள் அந்த பெண்ணின் பரஸ்பர சம்மதத்துடன் நடந்ததாக வலியுறுத்தி, தான் நிரபராதி எனத் தொடர்ந்து கூறிவந்துள்ளார். வயது வந்தோருக்கான சமூக வலைத்தளங்கள் வழியாகத் தொடர்புகொண்ட ஆண்களுக்கு, குறிப்பிட்ட நேரங்களிலும் இடங்களிலும் அந்தப் பெண்ணுடன் பாலியல் உறவு கொள்வதற்கான வாய்ப்புகளை ஊக்குவிக்கும் வகையில் ஜான்ஸ்டன் பெருமளவில் குறுஞ்செய்திகளை அனுப்பியதாக நீதிமன்றத்தில் திடுக்கிடும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜான்ஸ்டன் தன்னை 'ஒரு பொருளாக மட்டுமே' நடத்திய ஒரு அரக்கன் என்று பாதிக்கப்பட்டவர் கூறியுள்ளார்.

மேலும் 2024-ஆம் ஆண்டு ஜூலை மாதம், பாதிக்கப்பட்ட பெண்ணின் பிள்ளைகளால் ஆபாசப் படங்கள் அவர்களின் கவனத்திற்கு வந்துள்ளது. இதனையடுத்து, ஜான்ஸ்டன் மீது புகார் அளிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.