க்ரைம்

51 வருடதிற்கு பிறகு வெளிச்சத்திற்கு வந்த கொலை வழக்கு! - உயிருடன் இல்லாத சீரியல்- கில்லரை போலீசார் கண்டுபிடித்தது எப்படி? அதிரவைக்கும் உண்மை சம்பவம்

பெண்கள் தங்கும் விடுதிகள், பூங்காக்கள் மற்றும் பிற இடங்களில் கொலைகள் நிகழ்த்தி நாட்டைப் பதற்றத்தில்

மாலை முரசு செய்தி குழு

51 வருடம் கழித்து இளம்பெண்ணின் கொலை வழக்கு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த கொலையை அமெரிக்காவை சேர்ந்த தொடர் கொலைகாரனான டெட் பெண்டிதான் செய்துள்ளார் என்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.1974ம் ஆண்டில் உட்டாவைச் சேர்ந்த ஒரு பதின்வயது இளம்பெண்ணின் தீர்க்கப்படாத மரணத்திற்கும், பிரபல தொடர் கொலைகாரனான டெட் பெண்டிக்கும் இடையே புதிய டிஎன்ஏ பரிசோதனை மூலம் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என உள்ளூர் ஷெரிப் தெரிவித்துள்ளார்.

51 ஆண்டுகளுக்கு முன்பு, ஹாலோவீன் இரவில், 17 வயதான லாரா ஆன் ஐம், ஒரு விருந்திலிருந்து தனியாக ஒரு மளிகைக் கடைக்குச் சென்றபோது காணாமல் போனார். சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு, அமெரிக்கன் ஃபோர்க் கேன்யனில் உள்ள ஒரு நெடுஞ்சாலையின் ஓரத்தில், மலையேறுபவர்களால் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. லாரா கட்டப்பட்டு, தாக்கப்பட்ட நிலையில், ஆடையின்றி இருந்தார். கடத்தப்பட்ட பிறகு அவர் பல நாட்கள் உயிருடன் வைக்கப்பட்டிருக்க வாய்ப்பிருந்ததாக ஆதாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பெண்டிதான் இதற்குக் காரணம் என்று புலனாய்வாளர்கள் நீண்ட காலமாகச் சந்தேகித்து வந்தனர். 1989ல் புளோரிடாவில் அவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்பு, அவர் தனது குற்றத்தை வாய்மொழியாக ஒப்புக்கொண்டதாகக் காவல்துறை கூறியது. ஆனால், அவர்களால் அதை உறுதிசெய்யும் வரை அந்த வழக்கை முடிக்காமலேயே வைத்திருந்தனர்.

யார் இந்த டெட் பெண்டி?

அமெரிக்காவை சேர்ந்த டெட் பெண்டி, 20ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த மிகவும் கொடூரமான குற்றவாளிகளில் ஒருவர். போலீசாரால் கைது செய்யப்பதற்கு பின்னர் பெண்டி 30 கொலைகளை ஒப்புக்கொண்டார். ஆனால் அவர் உண்மையில் நூற்றுக்கணக்கானோரைக் கொன்றதாகச் சிலர் நம்புகின்றனர். இறுதியில், அவர் மூன்று கொலைகளுக்காகக் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, தீர்ப்பளிக்கப்பட்டு, 1989-ல் தூக்கிலிடப்பட்டார். இவர் பெண்கள் மற்றும் சிறுமிகளின் மரணங்களுடன் இவருக்கு தொடர்பு இருந்தது. குறிப்பாக பெண்டி, பெண்கள் தங்கும் விடுதிகள், பூங்காக்கள் மற்றும் பிற இடங்களில் கொலைகள் நிகழ்த்தி நாட்டைப் பதற்றத்தில் ஆழ்த்தின. அன்று பேண்டியின் கைது அமெரிக்காவையே உலுக்கியது. பெண்டி, நான்கு படித்த ஒருவர். உளவியல் மற்றும் சட்டம் ஆகியவை படித்தவர். அவரது வசீகரமான தோற்றத்தால் பெண்களிடம் உதவி கேட்பதுபோன்று கேட்டு, கடத்தி பல கொலைகளை செய்துவந்தார். பெண்டி, பெரும்பாலும் ஒரே மாதிரியான உடல் அம்சங்களைக் கொண்ட பெண்களைக் குறிவைத்தே கடத்தினார்.

அதன் பின்பு போலீசாரால் புளோரிடாவில் பெண்டி இறுதியில் கைது செய்யப்பட்டார். அமெரிக்க வரலாற்றில் மிகவும் பிரபலமான வழக்குகளில் ஒன்றாக இது மாறியது. பெரும்பாலான குற்றவாளிகளைப் போல் இல்லாமல், பெண்டி நீதிமன்றத்தில் தனக்காகத் தானே வாதாடினார். தனது சட்ட அறிவைப் பயன்படுத்தி சாட்சிகளிடம் கேள்வி எழுப்பியும், நடுவர் குழுவிடம் உரையாற்றியும் வந்தார். விசாரணையின் போது அவரது நிதானமும் தன்னம்பிக்கையும் குறிப்பிடத்தக்க ஊடகக் கவனத்தை ஈர்த்தது. பெண்டி தன்னைத் தற்காத்துக் கொள்ள முயன்றபோதிலும், பெண்டிக்கு எதிரான சான்றுகள் மிக வலுவாக இருந்தன. பெண்டி குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டது. 1989ல், புளோரிடாவின் மின்சார நாற்காலியில் பெண்டிக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. அது பெண்டியின் வாழ்க்கைக்கு ஒரு முடிவைக் கொண்டுவந்தாலும், அவனது குற்றங்களால் ஏற்பட்ட தாக்கத்திற்கு ஒரு முடிவைக் கொண்டுவரவில்லை.

லாராவின் வழக்கில், சேகரிக்கப்பட்ட மாதிரிகள் சிறியதாக இருந்தாலும், காலப்போக்கில் சிதைந்திருந்தாலும் அல்லது பல நபர்களின் டிஎன்ஏவைக் கொண்டிருந்தாலும், அவற்றிலிருந்து டிஎன்ஏவைப் பிரித்தெடுக்க புலனாய்வாளர்களுக்கு உதவும் புதிய தொழில்நுட்பத்தை மாநில குற்றவியல் ஆய்வகம் 2023-ல் பெற்றது என்று அவர் கூறினார். அந்தத் தொழில்நுட்பம், ஒரு தனிப்பட்ட ஆணின் டிஎன்ஏ விவரத்தை அடையாளம் காண அவர்களுக்கு உதவியது, அதை அவர்கள் ஒரு தேசிய சட்ட அமலாக்கத் தரவுத்தளத்தில் சமர்ப்பித்தனர்.

லாரா வழக்கில் சிக்கியது எப்படி?:

லாராவின் உடலில் கிடைத்த மாதிரிகள் சிறியதாக இருந்தாலும், காலப்போக்கில் சிதைந்திருந்தாலும் அல்லது பல நபர்களின் டிஎன்ஏவைக் கொண்டிருந்தாலும், அவற்றிலிருந்து டிஎன்ஏவைப் பிரித்தெடுக்க புலனாய்வாளர்களுக்கு உதவும் புதிய தொழில்நுட்பத்தின் மூலம், ஒரு தனிப்பட்ட ஆணின் டிஎன்ஏ விவரத்தை அடையாளம் காண அவர்களுக்கு உதவியது என்றும், அதை காவலர்கள் ஒரு தேசிய சட்ட அமலாக்கத் தரவுத்தளத்தில் சமர்ப்பித்தனர் என்றும் கூறினார். அதில்தான் பழைய குற்றவாளியாக இருந்த பெண்டியின் டிஎன்ஏ பொருந்தி இருக்கிறது. இதன் காரணமாகவே இந்த கொலைக்கும் காரணம் டெட் பெண்டிதான் என்பது காவல்துறையால் உறுதிசெய்யப்பட்டது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.