ajith and suthagar  
க்ரைம்

“குப்பை கிடங்கில் இருந்த ஆண் சடலம்” - நண்பனின் மனைவியுடன் ஏற்பட்ட தகாத உறவு.. மது அருந்த சொல்லி கழுத்தறுத்த சக நண்பர்கள்!

மூவரும் சேர்ந்து பெரியப்பநகர் நகராட்சி குப்பை கிடங்கின் அருகே உள்ள காலி இடத்தில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர்

Mahalakshmi Somasundaram

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே உள்ள குபேரபட்டினம் பகுதியை சேர்ந்த குருசாமி என்பவற்றின் 25 வயதான மகன் நவநீதன். இவரும் அதே பகுதியை சேர்ந்த சுதாகரும் சிறு வயதில் இருந்து நண்பர்களாக பழகி வந்துள்ளனர். அப்போது நவநீதனுக்கு சுதாகரின் நண்பரான 29 வயதுடைய அஜித் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அஜித்தின் விடும் அதே பகுதியில் அமைந்துள்ள நிலையில் அடிக்கடி நவநீதனும் சுதாகரும், அஜித்தை பார்க்க அவரது வீட்டிற்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்துள்ளனர். 

அப்போது அஜித்தின் மனைவி மேகவர்ஷினி உடன் நவநீதனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர் என கூறப்படுகிறது. இதனை அறிந்து கொண்ட அஜித்தை அவரது மனைவி மற்றும் நவநீதனை கண்டித்துள்ளார். இருப்பினும் மேகவர்ஷினியும் நவநீதனும் தங்கள் உறவை கை விடாமல் தொடர்ந்து பழகி வந்திருக்கின்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த அஜித் தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் பழனி ஜவஹர் நகருக்கு குடி பெயர்ந்துள்ளனர். 

இடம் விட்டு இடம் மாறிய பிறகும் மேகவர்ஷினியும் நவநீதனும் தொடர்ந்து பேசிவந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அஜித் குமார் நவநீதனை கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி நவநீதனை சுதாகர் உதவியுடன் மது அருந்த அழைத்துள்ளார். பின்னர் மூவரும் சேர்ந்து பெரியப்பநகர் நகராட்சி குப்பை கிடங்கின் அருகே உள்ள காலி இடத்தில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். மூவருக்கும் போதை தலைக்கேறிய நிலையில் அஜித் குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் நவநீதனை கழுத்தறுத்து கொலை செய்தனர். பின்னர் அவ்விடத்தில் இருந்து எதுவும் நடக்காதது போல அஜித்தும் சுதாகரும் அவர்களது வீட்டிற்கு சென்றனர். 

காலையில் வழியே சென்ற மக்கள் நவநீதனின் உடலை பார்த்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நவநீதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் கடைசியாக நவநீதனுடன் இருந்த சுதாகரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போது அஜித்தும் சுதாகரும் சேர்ந்து நவநீதனை கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து சுதாகர் மற்றும் அஜித்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.