க்ரைம்

“ஜூஸில் கலந்து கொடுக்கப்பட்ட மதுபானம்” - காதலிப்பதாக கூறி ஏமாற்றிய வாலிபர்.. பலமுறை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான 12 வகுப்பு மாணவி!

இரவு எட்டு மணிக்கு ஆட்டோவில் வந்து இறங்கிய சிறுமி வீட்டிற்கு சென்றதும் வீட்டில் மயக்கம் அடைந்து..

Mahalakshmi Somasundaram

சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவர் 15 வயதுடைய சிறுமி அபிதா. (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். தனது தாத்தா பாட்டியுடன் தங்கி படித்து வந்த சிறுமிக்கு அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அபிதாவுடன் மணிகண்டன் நெருக்கமாக பழகி வந்த நிலையில் இருவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டுள்ளது.

அபிதா தன்னை காதலிப்பதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மணிகண்டன் அடிக்கடி மாணவியை ஏமாற்றி அவரிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் தோழிகளுடன் வெளியே செல்வதாக கூறிவிட்டு அபிதா வீட்டை விட்டு சென்றார். அதன் பிறகு இரவு எட்டு மணிக்கு ஆட்டோவில் வந்து இறங்கிய சிறுமி வீட்டிற்கு சென்றதும் வீட்டில் மயக்கம் அடைந்து கீழே விழுந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அபிதாவின் தாத்தா பாட்டி அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு மாணவி மது போதையில் உள்ளதால் சிகிச்சை அளிக்க முடியாது என தெரிவித்துள்ளனர். எனவே உடனடியாக சிறுமியை அவரது தாத்தா பாட்டி ஸ்டான்லி அரசு மருத்துவமனை கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு சிறுமி முழு மதுபோதையில் மயங்கியதும் சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதும் தெரிய வந்தது.

இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் எம்கேபி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. எம் கே பி நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் வியாசர்பாடி எஸ் ஏ காலனி பகுதியைச் சேர்ந்த மாணவியை காதலிப்பதாக கூறி ஏமாற்றிய 26 வயதுடைய மணிகண்டன் நேற்று தனது பிறந்தநாள் என்பதால் சிறுமியை அழைத்துக்கொண்டு அவரது வீட்டிற்கு சென்று மது கொடுத்து சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியது தெரிய வந்தது.

இதையடுத்து எம் கே பி நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மணிகண்டனை கைது செய்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பன்னிரெண்டாம் வகுப்பு மாணவியை வாலிபர் காதலிப்பதாக கூறி பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.