புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் அருகே செந்தாமரை நகரை சேர்ந்தவர் 45 வயதுடைய தமிழ்செல்வி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பரத்ராஜ் என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. பின்னர் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக இருவரும் கடந்த 2020 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். இதில் தமிழ்செல்வி தனது மகளுடன் வில்லியனுரில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார்.
தமிழ்ச்செல்வியின் மகள் ஓதியம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வரும் நிலையில் தினமும் மகளை பள்ளிக்கு கூட்டி செல்வது மற்றும் மீண்டும் மாலை அழைத்து வருவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். இந்நிலையில் தமிழ்செல்விக்கு அதே பகுதியில் பர்னிச்சர் கடை வைத்து நடத்தி வரும் ஐயப்பன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஐயப்பனுக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ள நிலையில் இவர்களது பழக்கமானது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி இருவருவரும் அடிக்கடி சந்தித்து பழகிவந்தனர் என சொல்லப்படுகிறது.
அப்போது ஐயப்பன் அடிக்கடி குடும்ப செலவுகளுக்காக தமிழ்செல்வியிடம் பணம் வாங்கிய நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்செல்வி தான் கொடுத்த பணத்தில் இருந்து ஒரு லட்சத்தை திரும்ப பெற்றுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் வழக்கம் போல கடந்த (டிச 05) ஆம் தேதி காலையில் தனது மகளை பள்ளிக்கு அழைத்து சென்ற தமிழ்செல்வி அவரை விட்டு விட்டு ஐயப்பன் பர்னிச்சர் கடைக்கு சென்றிருக்கிறார்.
இந்நிலையில் இருவருக்கும் இடையே பணம் கொடுங்கள் வாங்கல் குறித்து தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஐயப்பன் தமிழ்செல்வியை சரமாரியாக அடித்து கொலை செய்து உடலை சாக்கு மூட்டையில் கட்டி கடைக்குள் வைத்திருக்கிறார். பின்னர் இரவு ஆள்நடமாட்டம் குறைந்த பிறகு சாக்கு மூட்டையை எடுத்து சென்று அருகில் உள்ள வாய்க்கால் பகுதியில் வீசிவிட்டு வழக்கம் போல தந்து அன்றாட வேலைகளை செய்து வந்திருக்கிறார். இதற்கிடையில் தமிழ்செல்வியை தேடி வந்த அவரது தம்பி மற்றும் உறவினர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த போலீசார் தமிழ்செல்வியின் செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்திய நிலையில் அவர் கடைசியாக ஐயப்பனிடம் பேசியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து ஐயப்பனை கைது செய்த போலீசாரை அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் பணம் பிரச்சனை காரணமாக ஐயப்பன் தமிழ்செல்வியை கொலை செய்தது இருவருக்கும் இடையே தகாத உறவு இருந்தததும் தெரியவந்தது. மேலும் இதே போல் கடந்த 2015 ஆம் ஆண்டு ஐயப்பன் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பெண்ணுடன் கள்ளக்காதலில் இருந்து அந்த பெண்ணையும் கொன்று சாக்கு மூட்டையில் கட்டி ஏரியில் வீசியது தெரியவந்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்