பெண்ணை கேலி செய்ததால் தேங்காய் வியாபாரி கழுத்தறுத்து கொலை.. கைகள் கட்டப்பட்ட நிலையில் ஏரியில் மிதந்த சடலம்!

இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள், ருத்ராட்ச ராவை மது அருந்த அழைத்து சென்று...
பெண்ணை கேலி செய்ததால் தேங்காய் வியாபாரி கழுத்தறுத்து கொலை.. கைகள் கட்டப்பட்ட நிலையில் ஏரியில் மிதந்த சடலம்!
Published on
Updated on
2 min read

தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருகே ஆலம்பாடி காவிரி ஆற்றில் கைகள் கயிற்றால் கட்டப்பட்ட நிலையில் ஆண் பிணம் மிதந்து வந்து நீலகிரி தோப்பு வனப்பகுதியில் கரை ஒதுங்கியது. சடலத்தை பார்த்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒகேனக்கல் போலீசார் உயிரிழந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டியை சேர்ந்த சங்கர்ராவ் என்பவரின் மகன் 35 வயதுடைய ருத்ராட்ச ராவ் என்பதும், இவர் அதே பகுதியில் தேங்காய் வியாபாரம் செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அவரது குடும்பத்தினரை வரவழைத்து ருத்ராட்ச ராவ் தான் என அடையாளத்தை உறுதி செய்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் ருத்ராட்சராவ் ஒரு பெண்ணை கேலி செய்ததாலும் மேலும் கொடுக்கல் வாங்கல் தகராறு காரணமாகவும் இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள், ருத்ராட்ச ராவை மது அருந்த அழைத்து சென்று போதை ஏறியதும் ருத்ராட்ச ராவை கழுத்தை அறுத்து கொலை செய்து, கைகளை கயிற்றால் கட்டி காவிரி ஆற்றில் வீசி சென்றது தெரியவந்தது.

இதுதொடர்பாக 3 பேரை பிடித்து ஒகேனக்கல் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் கேரட்டியை சேர்ந்த முருகேசன் வயது 49 ஒகேனக்கல் இந்திராநகரை சேர்ந்த நாகராஜ் வயது 45 ஒகேனக்கல் சாணார் கொட்டாயை சேர்ந்த மூர்த்தி வயது 35 . ஆகிய மூவரும் சேர்ந்து ருத்ராட்சராவை கடந்த 5 ஆம் தேதி ஒகேனக்கல் வரவழைத்துள்ளனர். பின்னர் ஒகேனக்கல் ஆலம்பாடி அடுத்த நீலகிரி தோப்பு என்ற இடத்தில் நால்வரும் சேர்ந்து மது அருந்தி உள்ளனர் . மது போதையில் முருகேசன், நாகராஜ் மூர்த்தி மூன்று பேரும் சேர்ந்து ருத்ராட்சராவை கழுத்தை அறுத்தும் வயிற்றைக் கிழித்தும் கொலை செய்துள்ளனர் .

இதனைத் தொடர்ந்து ஒகேனக்கல் போலீசார் முருகேசன், நாகராஜ், மூர்த்தி ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர் . பெண்ணை கேலி செய்ததால் தேங்காய் வியாபாரி கழுத்தை அறுத்து கொலை செய்து காவிரி ஆற்றில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இது தான் காரணமா அல்லது கொலைக்கு வேறு காரணம் இருக்கிறது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com