ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே அமைந்துள்ளது புதுச்சேரி மாநிலம் ஏனாம் பிராந்தியம் பகுதியில் உள்ள பல்லர் தெருவில் வசித்து வருபவர் 30 வயதுடைய பெர்மாடி நானி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 26 வயதுடைய தேனா என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது இவர்களுக்கு 7 வயதில் 1 ஆம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தை உள்ளது. கட்டிட தொழிலாளியான நானிக்கு அவ்வப்போது குடிக்கும் பழக்கம் இருந்ததாக சொல்லப்படுகிறது.
ஆனால் திருமணத்திற்கு பிறகு தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வரும் நானி மனைவி தேனாவை அடித்து துன்புறுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் தேனா பிரசவத்திற்காக அவரது தாய் வீட்டிற்கு சென்று அங்கிருந்த குழந்தையை பெற்றெடுத்துள்ளார். குழந்தை பிறந்து சில வருடங்கள் குடிக்காமல் இருந்ததால் மீண்டும் கணவன் மனைவி இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.
பின்னர் வழக்கம் போல குடிக்க தொடங்கியாக நானி வேலைக்கு சரிவர செல்லாமல், குடும்ப செலவுகளையும் பார்த்துக் கொள்ளாமல் தேனா மற்றும் குழந்தையை துன்புறுத்தி வந்திருக்கிறார். இதனால் அவ்வப்போது கணவன் மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இதனிடையே இன்று காலை கணவன் மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பெஃர்மாடி நானி அவரது, மனைவி தேனாவை கையால் சரமாரியாக அடித்துள்ளார். இதில் அவரது கண், முகம் தலை ஆகிய பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
இதில் தேனாவின் காது மூக்கு வழியாக இரத்தம் வழிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் ஏனாம் காவல் நிலையத்திற்கு அளித்த தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தேனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள ஏனாம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, கணவர் நானியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவனே மனைவியை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.