புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள மல்லாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் 55 வயதுடைய பழனிவேலு. இவரது மனைவி 43 வயதுடைய மகாலெட்சுமி இவர்களுக்கு 25 வயதில் தமிழ் செல்வி மற்றும் 20 வயதில் சாரதா ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். பழனிவேலுவுக்கு கொழுப்பு கட்டிகள் இருந்த நிலையில் அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார் எனவே மகாலெட்சுமி மற்றும் அவரது மூத்த மகளான தமிழ் செல்வி வேலைக்கு சென்று குடும்பத்தை கவனித்து வருகின்றனர்.
மகாலெட்சுமி மற்றும் தமிழ் செல்வி வேலைக்கு செல்வதனை அக்கம் பக்கத்தினர் தவறாக பேசுவதாக சொல்லப்படுகிறது. மேலும் பழனிவேலுவும் வேலைக்கு சென்று வரும் மனைவி மற்றும் மகளை சந்தேகப்பட்டு அவர்களை அடிக்கடி அவதூறாக பேசி வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 52 நாட்களுக்கு முன்பு மகாலட்சுமிக்கும் அவரது கணவர் பழனிவேலுக்கும் வழக்கம் போல் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அப்போது பழனிவேலு தகாத வார்த்தைகளால் திட்டியதால் ஆத்திரமடைந்த மகாலட்சுமி பழனிவேலுவை தனது மகள்களின் உதவியுடன் அடித்து கொலை செய்துவிட்டு கொலை செய்தது வெளியில் தெரியக்கூடாது என அவரது வீட்டின் அருகே உள்ள கழிவறை பக்கத்தில் குழிதோண்டி உடலை புதைத்து வைத்தனர். பின்னர் பழனிவேலுக்கு கொழுப்பு கட்டிகள் உள்ள நிலையில் அதற்காக கோயம்புத்தூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாக அனைவரையும் நம்ப வைத்துள்ளனர்.
இந்நிலையில் நீண்ட நாட்களாக பழனிவேலு அவரது சகோதரியான காவேரியை தொடர்பு கொள்ளாமல் இருந்ததால் சந்தேகம் அடைந்து காவேரி தனது சகோதரரை காணவில்லை என்று கூறி நமணசமுத்திரம் காவல் நிலையத்தில் புகார் அள்ளித்தார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மகாலட்சுமி தான் அவரது கணவர் பழனிவேலுவை அடித்து கொலை செய்து புதைத்துவிட்டு நாடகம் ஆடியதும் அதற்கு அவரது இரண்டு மகள்களும் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.
எனவே மகாலட்சுமியையும் அவரது மகள்களான தமிழ்ச்செல்வி மற்றும் சாரதா ஆகிய மூன்று பேரையும் கைது செய்துள்ள போலீசார் பழனிவேலுவை புதைத்த இடத்திற்கு மகாலட்சுமியை அழைத்துச் சென்று திருமயம் வட்டாட்சியர் வயதராஜன் முன்னிலையில் இலுப்பூர் டிஎஸ்பி வித்யா தலைமையிலான நமணசமுத்திரம் போலீசார் உடலைத் தோண்டி எடுத்து அங்கேயே மருத்துவர்களைக் கொண்டு உடற்கூறு ஆய்வு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.