திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், அடுத்த இறையூர் கிராமத்தில் வசித்து வரும் லஷ்மிநாராயணன் தமிழரசி தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் தாமோதரன் வயது 25, பின்னர் 15 ஆண்டுகள் கழித்து 2014 ஆம் ஆண்டு பிறந்த இரண்டாவது மகன், தான் லோகேஸ்வரன்.
கடந்த (28.07.2022) ஆம் ஆண்டு மதியம் விளையாட சென்ற லோகேஸ்வரன் வீட்டுக்கு வராததால், பதட்டம் அடைந்த குடும்பத்தினர் அக்கம் பக்கம், அனைத்து இடத்திலும் தேடிப் பார்த்துள்ளனர்.
பின்னர் வீட்டின் பின்பகுதியில் செப்டிக் டேங்க் கட்ட, தோண்டப்பட்ட இரண்டு அடிக்கு மட்டும் தண்ணீர் தேங்கி இருந்த குழியில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
ஏற்கனவே லட்சுமிநாராயணன் குடும்பத்திற்கும், எதிரில் வசிக்கும் அவர்களின் உறவினர் குடும்பத்திற்கும் மின் இணைப்பு கம்பி வீட்டின் மேல் செல்வது, நில பிரச்சினை, ஆகியவற்றால் அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டுள்ளது, அவர்களே தன்னை பழி வாங்கும் நோக்கத்தில் தன் மகன் லோகேஸ்வரனை ரவி, சங்கர், கிருஷ்ணன், எழிலரசி ஆகியோர் கொலை செய்து விட்டதாக, லஷ்மிநாராயணன் தரப்பில் குற்றம் சாட்டி வந்த நிலையில்.
ரவி நாங்கள் தான் உன் பிள்ளையை கொலை செய்தோம், உன்னால் எங்களை ஒன்றும் செய்து விட முடியாது. என கூறியதாக சொல்லப்படுகிறது.
மேலும் அதே பகுதியைச் சேர்ந்த பாக்யராஜ், ரவி மற்றும் சங்கர் உடன் உணவு அருந்தும் போது, லஷ்மிநாராயணன் மகன், லோகேஸ்வரனை அவர்கள் தான் கொலை செய்ததாக (09/11/2024) கூறினார்கள். எனவும் காவல் நிலையம் மற்றும் நீதிமன்றத்தில் நேரில் வந்து சாட்சியளிப்பின் எனவும், எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.
இதனை தொடர்ந்து, வருவாய்த்துறையினர் மற்றும் காவல் துறையினர் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட சிறுவன் உடலை, தோண்டி மருத்துவ குழு மூலம் உடற்கூறு பரிசோதனைக்காக, திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த, சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்