க்ரைம்

“செல்போனில் இருந்த பல பெண்களின் வீடியோக்கள்” - சக தோழிகள் குளிப்பதை வீடியோ எடுத்த மாணவி.. காதலித்து ஏமாற்றிய மாணவன்!

இதற்கு மறுத்தால் மாணவியுடன் தனிமையில் இருந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில்

Mahalakshmi Somasundaram

திருவாரூர் மாவட்டம், ஆவூர் பகுதியைச் சேர்ந்தவர் 22 வயதான முகமது இக்லால். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்திருக்கிறார். அப்போது தான் கல்லூரியில் அதே துறையில் படிக்கும் தனது ஜூனியர் மாணவியை காதலிப்பதாக கூறி ஏமாற்றி, அவருடன் தனிமையில் இருப்பதை வீடியோ எடுத்து வைத்திருந்துள்ளார். அதனை வைத்து பலமுறை மாணவியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.

மேலும் மாணவியை மிரட்டிய முகமது இக்லால், தன்னுடன் படிக்கும் தோழிகளின் அந்தரங்க வீடியோக்களை எடுத்து அனுப்ப சொல்லி வற்புறுத்தியுள்ளார். இதற்கு மறுத்தால் மாணவியுடன் தனிமையில் இருந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி விடுவேன் என கூறியுள்ளார்.இதனால் பயந்த மாணவி தன்னுடன் படிக்கும் தோழிகள் உடை மாற்றும் போது அதனை வீடியோ எடுத்து அனுப்பி விடுவது வழக்கமாக வைத்திருந்துள்ளார்.

இந்நிலையில் மாணவி தனது தோழிகளுடன் கல்லூரி இன்டெர்ன்ஷிப் செய்வதற்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள படப்பையில் அறை எடுத்து தங்கியுள்ளனர். நேற்று மாணவி சக தோழி ஒருவர் குளிப்பதை வீடியோ எடுத்து கொண்டு இருந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மற்றொரு தோழி மாணவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரது போனை வாங்கி பார்த்தபோது அவர் ஏற்கனவே இது போன்ற பல வீடியோக்கள் எடுத்தது தெரியவந்துள்ளது. பின்னர் மாணவியிடம் தோழிகள் இதை பற்றி கேட்கும்போது தனக்கு நடந்ததை பற்றியும் இக்லால் மிரட்டியதை பற்றியும் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து கல்லூரி மாணவிகள் மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். உடனே மணிமங்கலம் போலீசார் திருவாரூர் விரைந்து முகமது இக்லாலை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு அவரது மடிக்கணினி மற்றும் செல்போன் பறிமுதல் செய்துள்ளனர். வழக்கு பதிவு செய்து இக்லாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். சக தோழிகளை கல்லூரி மாணவன் இவ்வாறு செய்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.