பீகாரை சேர்ந்தவர் சமீர் அன்சாரி இவர் அதே பகுதியில் கட்டுமான தொழிலாளியாக பணிபுரிந்து வந்த நிலையில் அவருடன் கொத்தனாராக பணிபுரிந்த ரூபி என்பவருடன் காதல் ஏற்பட்டு கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். பின்னர் இருவரும் சேர்ந்து குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வாடகை வீடு எடுத்து வாழ்ந்துவந்தனர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் திடீரென சமீர் அன்சாரி காணாமல் போனதாக சொல்லப்படுகிறது. வெகுநாட்களாக அவர்களது வீட்டில் சமீர் அன்சாரி இல்லாததை கவனித்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து அவரது மனைவியிடம் கேட்டுள்ளனர்.
அதற்கு சமீர் அன்சாரி வேலைக்கு வெளிநாட்டிற்கு சென்றுள்ளதாகவும் அதிக கடன் சுமையினால் இரவோடு இரவாக சென்றுவிட்டார் என அவரது மனைவி கூறியுள்ளார். பின்னர் சில மாதங்களுக்கு பிறகு ரூபி தனது குழந்தைகளுடன் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை காலி செய்து கொண்டு தலைமறைவாகியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் ரூபிக்கும் அதே பகுதியை செய்த இம்ரான் என்பவருக்கும் திருமணத்திற்கு மீறிய உறவு இருந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து இம்ரானை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளன. ரூபிக்கும் இம்ரானுக்கு கள்ளக்காதல் இருந்ததை அறிந்த சமீர் அன்சாரி தனது மனைவியை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரூபி இதற்கு மேல் சமீர் அன்சாரி உயிருடன் இருந்தால் இம்ரானுடன் பழக முடியாது என நினைத்து தனது கணவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி தனது கள்ளக்காதலனை இரவு வீட்டிற்கு வரவழைத்த ரூபி அவருடன் சேர்ந்து சமீர் அன்சாரியை கழுத்தறுத்து கொலை செய்திருக்கின்றனர்.
பின்னர் அவரது உடலை பல துண்டுகளாக வெட்டி அவர்களது வீட்டின் சமையலறையில் குழிதோண்டி புதைத்துவிட்டு வழக்கம் போல இருவரும் பழகி வந்திருக்கின்றனர். அக்கபக்கத்தினர் தொடர்ந்து கணவர் பற்றி விசாரிக்கவே எங்கு உண்மை தெரிந்து விடுமோ என நினைத்து ரூபி தனது குழந்தைகளுடன் பக்கத்துக்கு ஊருக்கு சென்று வசித்து வந்திருக்கிறார். இந்நிலையில் கள்ளக்காதலன் கொடுத்த தகவலின் அடிப்படையின் ரூபியை கைது செய்த போலீசார் சமீர் அன்சாரியின் எலும்பு துண்டுகளை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கணவனை கொன்று புதைத்து மனைவி ஒரு வருடமாக கள்ளக்காதலனுடன் வாழ்ந்து வந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.