கர்நாடக மாநிலம், மேய்ச்சல் மாவட்டம் கிழக்கு போடுப்பால் பிருந்தாவன் பகுதியை சேர்ந்தவர் 45 வயதான அசோக். இவர் தனியார் லாஜிஸ்டிக் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பூர்ணிமா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்திருக்கின்றனர்.
தினமும் அசோக் காலையில் வேலைக்கு சென்றுவிட்டு மாலை அல்லது இரவு தான் வீட்டுக்கு வருவார் என சொல்லப்படும் நிலையில் வீட்டில் தனியாக இருந்த பூர்ணிமாவுக்கு அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான 22 வயதுடைய மகேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது. இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து அசோக்கிடம் தெரிவித்திருக்கின்றனர்.
இதனால் கோபமடைந்த அசோக் தனது மனைவியை தினந்தோறும் கள்ள காதல் குறித்து கேட்டு அடித்து கொடுமை படுத்தியதாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பூர்ணிமா தனது கணவர் தன்னை கொடுமை படுத்துவதாக தனது கள்ளக் காதலன் மகேஷிடம் தெரிவித்திருக்கிறார். பின்னர் இருவரும் சேர்ந்து அசோக்கை கொலை செய்ய திட்டம் தீட்டியிருக்கின்றனர். அதன்படி கடந்த (டிச 11) ஆம் தேதி வெளி முடித்து வீடு திரும்பிய அசோக்கை சரமாரியாக அடித்து கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கின்றனர்.
பின்னர் அசோக்கின் உடலை கழிவறைக்கு இழுத்து சென்று போட்ட அவரது மனைவி பூர்ணிமா “பாத்ரூமில் தவறி விழுந்து அசோக் இறந்துவிட்டதாக தெரிவித்திருக்கின்றார்” பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அசோக்கின் உடலை பார்த்த போது அவரது கை, கால், கழுத்து ஆகிய பகுதிகளில் காயம் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். எனவே உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதனை தொடர்ந்து பிரேத பரிசோதனை முடிவில் அவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டதாக தெரியவந்ததை தொடர்ந்து அவரது மனைவியிடம் விசாரணை மேற்கொண்டதில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து அவரே தனது கணவரை திட்டமிட்டு கொலை செய்தது தெரியவந்தது. எனவே வழக்குப்பதிவு செய்த போலீசார் பூர்ணிமா, மகேஷ் மற்றும் இவர்களுக்கு உதவியாக இருந்த மகேஷின் நண்பர் என மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்திருக்கின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.