காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த ஆர்.என்.கண்டிகை பகுதியை சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் தனது கணவரின் உறவினர் ஒருவருடன் தகாத உறவு இருந்துள்ளார். எனவே இருவரும் அடிக்கடி வீட்டிற்கு தெரியாமல் மறைவான பகுதிகளுக்குச் சென்று உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். அப்படி அவர்கள் இருவரும் நெருக்கமாக பழகி வந்ததை கவனித்த அதே பகுதியை சேர்ந்த மூன்று இளைஞர்கள் அவரகள் உல்லாசமாக இருப்பதை மறைமுகமாக புகைப்படம் எடுத்துள்ளனர். அந்தப் புகைப்படத்தை காட்டி அந்த இளைஞர்கள் அந்த பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்ததுடன், பணம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.
எங்கு கள்ளக்காதல் குறித்து கணவனுக்கு தெரிந்து விடுமோ என அச்சமடைந்த அந்த பெண் கணவருக்கு தெரியாமல் அவர்களுக்கு அவ்வப்போது பணம் அளித்துள்ளார். அந்தப் பெண் சிறுக சிறுக ரூபாய் இருபது லட்சத்திற்கு மேல் பணம் அளித்த நிலையில் மீண்டும் அவர்கள் ஐந்து லட்சம் பணம் கேட்டுள்ளனர். அதற்கு பெண் மறுப்பு தெரிவிக்கவே தொடர்ந்து தொல்லை செய்த வாலிபர்கள் அந்தரங்க புகைப்படத்தை வெளியிடுவதாக மிரட்டியுள்ளனர். எனவே அந்த பெண் கணவர் சீட்டு பணம் கட்டுவதற்காக வைத்திருந்த ரூபாய் 5 லட்சத்தை கணவருக்கு தெரியாமல் எடுத்து அந்த இளைஞர்களுக்கு கொடுத்துள்ளார்.
இந்நிலையில் சீட்டு பணம் கட்டாதது குறித்து அந்த பெண்ணிடம் கணவர் கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பெண்ணின் கள்ளக்காதல் குறித்து கணவனுக்கு தெரியவந்த நிலையில் மன உளைச்சல் அடைந்த அந்த பெண் ஆசிட்டை குடித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார். அவரை உறவினர்கள் மீட்டு செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ள நிலையில் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அந்த பெண் பணம் கொடுத்த விவகாரம் குறித்து கணவரிடம் தெரிவித்ததன் பேரில் அவர் பெருநகர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பெண்ணை மிரட்டிய அதே பகுதியை சேர்ந்த திமுக ஊராட்சி மன்ற தலைவர் மகன் சந்தோஷ் டேனியல், மைக்கேல்ராஜ், மார்ட்டின் டேனியல், ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து அவர்களது செல்போன்களை கைப்பற்றிய போலீசார் அதில் உள்ள பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை டெலிட் செய்து வேறு நகல்கள் உள்ளதா என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த புகைப்படத்தை வைத்து பெண் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.