சென்னை சாலிகிராமம் காந்தி நகரைச் சேர்ந்தவர் சம்பத் (76). கடந்த 11ஆம்தேதி இரவு அவர் மார்கெட்டுக்கு சென்று விட்டு வீடு திரும்பி சென்றார்.
சாலிகிராமம் அம்பேத்கார் தெருவில் நடந்து சென்றார். அப்போது வேகமாக வந்த பைக் ஒன்று சம்பத் மீது மோதியது. அவர் சாலையில் விழுந்து ஏற்பட்ட விபத்தில் அவருக்கு மூக்கு, நெற்றியில் ரத்தகாயம் வலது கையில் மணிகட்டில் உள்காயமும் ஏற்பட்டது.
தகவல் அறிந்து அசோக்நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் 16 வயது சிறுவன் பைக்கை ஓட்டி வந்தது தெரிய வந்தது. அந்த சிறுவன் யார் என்பது குறித்து பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்