நடிகரும், சமையல் கலைஞருமானவர் மாதம்பட்டி ரங்கராஜ். டிவி செலிபிரிட்டியான இவர் மீது ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த (செப் 29) ஆம் தேதி புகார் அளித்தார். ஏற்கெனவே திருமணமான இவர் தன்னை திருமணம் செய்வதாக கூறி தன்னோடு இரண்டு வருடங்கள் வாழ்ந்ததாகவும், தன் வயிற்றில் வளரும் குழந்தைக்கு அவர் தான் தந்தை என்றும், இப்போது ஏமாற்றி விட்டதாகவும் ஜாய் கிரிசில்டா புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில் கடந்த (அக் 31) ஆம் தேதி ஜாய் கிரிசில்டாவிற்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில் அந்த குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ் பெயரில் பிறப்பு சான்றிதழ் பெற்றுயிருந்தார். இதனை தொடர்ந்து மகளிர் ஆணையத்தில் ‘அந்த குழந்தைக்கு நான் தான் தந்தை’ என மாதப்பட்டி ரங்கராஜ் ஒப்புக்கொண்டதாக தகவல் பரவி வந்தது, இதனை தொடர்ந்து இதுகுறித்து மாதம்பட்டி ரங்கராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் “மகளிர் ஆணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நான் எந்த ஒப்புதலையும் கொடுக்கவில்லை. நான் ஜாய்லை தள்னிச்சையா (Under free will) திருமணம் செய்து கொண்டதாக ஒருபோதும் ஒப்புக்கொள்ளவில்லை, என்பதை நான் திட்டவட்டாக கூறுகிறேன். ஜாய் என்னை அவதூறு செய்வதற்காக தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதாக பலமுறை பிரட்டியதால், இந்த திருமணம் மிரட்டலின் பேரில் நடந்தது. செப்டம்பர் 2025 இல் , ஆயிரம்விளக்குகள், மகளிர் காவல் நிலையத்தின் புலனாய்வு அதிகாரி முன்பும் மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்திலும் விரிவான வாக்குமூலங்களை நான் ஏற்கனவே அளித்துள்ளேன்.
இந்தத் திருமணம் மிரட்டலின் பேரில் கட்டாயப்படுத்தப்பட்டு , என்னிடமிருந்து பணம் பறிக்கும் ஒரே நோக்கத்துடன் செய்யப்பட்டது என்பதை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன். கமிஷனின் முன் நடந்த அடுத்தடுத்த நடவடிக்கைகளின் போது, ஜாய் எனக்கு மாதத்திற்கு 1,50,000 பராமரிப்புத் தொகையாகவும், தனது காருக்கு ரூ 1.25 லட்சம் மாதாந்திர தொகையை செலுத்த வேண்டும் என்றும் கோரினார். நான் அந்த கோரிக்கையை மறுத்துவிட்டேன்.
நான் ஒருபோதும் டிஎன்ஏ பரிசோதனையை மறுத்ததில்லை. மேலும் அந்தக் குழந்தை என்னுடையது என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டால்(DNA Test) அத்தக் குழந்தையை வாழ்நாள் முழுவதும் கவனித்துக் கொள்வேன் என்றும் கூறியுள்ளேன். இந்த வாக்குமூலம் ஏற்கனவே ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலைய விசாரணை அதிகாரி முன் செப்டம்பர் 2025 அன்றே பதிவுசெய்யப்பட்டுள்ளது.
மகளிர் ஆணையத்தின் பரிந்துரை உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நான் எந்த வாக்குமூலத்தையும் அளிக்கவில்லை அந்த பரிந்துரை உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன், மேலும் உண்மையை நிறுவ அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பிப்பேன். ஆணையத்தின் முன் நடந்த அனைத்தும் சட்டத்தின்படி நீதிமன்றத்தில் முறையாக சமர்ப்பிக்கப்படும்.” என தெரிவித்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.