பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பீகார் தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. 234 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது. மேலும் பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025 -ன் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் இந்தசூழலில், தற்போதைய நிலவரப்படி, NDA கூட்டணி 205 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
பாஜக 96 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையான கட்சியாக மாறியுள்ளது. மேலும் பீகார் அரசியல் களத்தில் MGB கூட்டணி வெறும் 32 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. எனினும், களத்தில் பணம் சார்ந்த வாக்குறுதிகள் எவ்வாறு வேலை செய்கின்றன என்பதற்கான ஒரு தெளிவான பாடத்தை இந்த தேர்தல் கற்றுக்கொடுத்துள்ளது. இந்தத் தேர்தலில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) மிகக் குறைவான தொகையைக் கொண்ட ஒரு திட்டத்தைக் கூறி மாபெரும் வெற்றியைச் சுவைத்து உள்ளது. அதே நேரத்தில், எதிர்க்கட்சிக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ், மூன்று பெரிய தொகையான ரூபாய் முப்பதாயிரத்தை வாக்குறுதியாக அளித்தபோதும், அது எதிர்பார்த்த வாக்குகளைப் பெற்றுத் தரவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்குப் பின்னால் உள்ள "அசுர வலிமை" வெறும் தேர்தல் வியூகம் மட்டுமல்ல, அது திட்டங்களின் நம்பகத்தன்மையையும், அவற்றைச் செயல்படுத்தும் நிர்வாகத் திறமையையும் சார்ந்தது என்பதை இந்த முடிவுகள் தெளிவாகக் காட்டுகின்றன. மேலும் கடந்த ஓராண்டு முழுக்க பீகாரில் நலத்திட்டங்கள் மழை போல பொழிந்தது. ஆனாலும், இந்த தேர்தல் முடிவுகள் பாஜக -வுக்கு சாதகமாகவே அமைந்துள்ளது.
இந்நிலையில் பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025ன் முடிவுகள் வெளியாகியது, பிரஷாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி, ஒரு இடத்தில்கூட முன்னிலை பெற முடியாமல், போனது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கட்சியான ஜன் சுராஜ் மீது பெரும் எதிர்பார்ப்புகள் எழுந்தது, ஆனால் தேர்தல் முடிவுகள் pk -விற்கு எதிராக அமைந்துள்ளது.
காங்கிரஸ் படுதோல்வி!
50 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட கட்சியான காங்கிரஸ் பீகார் தேர்தலில் முன்னெப்போதும் இல்லாதவகையில் காங்கிரஸ் அம்மாநிலத்தில் படுதோல்வியை சந்தித்திருக்கிறது. வெறும் 5 இடங்களை மட்டுமே காங்கிரஸ் தனது கையில் வைத்திருக்கிறது. இது கட்சி ரீதியாகவே மிகப்பெரும் பின்னடைவாகும்.
காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி ஆகியோர் இணைந்து ‘மஹா கட்பந்’ கூட்டணி உருவானது. ஆனால் இந்த கூட்டணி இந்த 2025 தேர்தலில் மிகப்பெரும் வெற்றியை பெரும் என கூறப்பட்டது. ஆனால் கள நிலவரம் அனைத்தையும் மாற்றி எழுதியுள்ளது.
கடந்த ஓராண்டாகவே பீகாரின்மீது நலத்திட்டங்கள் மழை போல பொழிந்தன, ஆனால் தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்னர் NDA கூட்டணி பெண்களுக்கு ரூ.10,000 வழங்கியது பெரும் பேசுபொருளானது. ஆனால் அந்த ரூ.10,000 தான் இன்று NDA கூட்டணியின் வெற்றியை சாத்தியமாகியுள்ளது.
ஆனால் ‘மஹா கட்பந்தன்’ கூட்டணியின் தோல்விக்கு, கூட்டணியில் நிலவிய சில சிக்கல்களும் காரணம் என சில அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். அதில், “இந்த தேர்தல் பாஜக ஒரு கட்சியை எப்படி அணுகுகிறது என்பதற்கான ஒரு உதாரணம் . SIR - மீது மிகப்பெரும் விமர்சனங்கள் இருந்தாலும், அதுவே முழு காரணம் என்று சொல்லிவிட முடியாது. லோக் ஜன் சக்தி கட்சியின் ஷிராக் பஸ்வானை உள்ளே கொண்டு வந்தது மிக முக்கியமான ஒரு நகர்வு .
பிரதமரின் பேச்சு!
டெல்லி பாஜக தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "நாங்கள் மக்களின் பணியாளர்கள். எங்களின் கடின உழைப்பின் மூலம் நாங்கள் மக்களை மகிழ்ச்சியாக வைத்துள்ளோம். மேலும், நாங்கள் மக்களின் இதயங்களைக் கொள்ளை அடித்துள்ளோம். அதனால்தான், ஒட்டுமொத்த பிகாரும் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி வேண்டுமென முடிவு செய்துள்ளது.
நான் காட்டாட்சி குறித்து பேசுகையில், ஆ.ர்.ஜெ.டி கட்சி எந்தவொரு எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. ஆனால், எனது பேச்சு காங்கிரஸ் உறுப்பினர்களை மட்டும் பாதிக்கின்றது. இனிமேல் காங்கிரசின் காட்டாட்சி ஒருபோதும் பீகாருக்குத் திரும்பாது என்பதை நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். பீகார் மக்கள் வலிமையான பீகாருக்காக வாக்களித்துள்ளனர்.
இன்றைய வெற்றி பிகாரில் ஒரு புது விதமான எம்.வொய். தத்துவத்தை உருவாக்கியுள்ளது. அதுதான் மகிளா (மகளிர்) மற்றும் யூத் (இளைஞர்கள்). இன்று, நாட்டில் அதிகளவிலான இளைஞர்கள் உள்ள மாநிலங்களில் பிகாரும் ஒன்று. அனைத்து மதங்கள் மற்றும் சாதிகளைச் சேர்ந்த இளைஞர்களும் அங்கு இருக்கின்றனர். இது மக்களுக்கு தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கையை மீண்டும் உறுதி செய்த்துள்ளது” என பேசியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.