chandigarh airport 
இந்தியா

தீவிரமடையும் டிரோன் தாக்குதல்..! 32 விமான நிலையங்கள் மூடல்!

“ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கை மூலம் 9 பாகிஸ்தானிய பயங்கரவாதிகளின் முகாம்களை தாக்கி அழித்துள்ளது.

Saleth stephi graph

கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பாஹல்காம் பகுதியில் நடந்த பயங்கர தாக்குதலில் 26 இந்தியர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதற்கு எதிர்வினையாற்றிய இந்தியா “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கை மூலம் 9 பாகிஸ்தானிய பயங்கரவாதிகளின் முகாம்களை தாக்கி அழித்துள்ளது. இதனால் இருநாடுகளுக்கும் இடையில் கடும் மோதல் உருவாக்கியது.

இரவு முழுவதும் பாக். டிரோன் தாக்குதல் நடத்தி வருவதை ஒட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 32 விமான நிலையங்கள் மே15ம் தேதி வரை மூடபட்டுள்ளது. அம்பாலா, அவந்திப்பூர், புஜ், பிகானெர், சண்டிகர், ஹிண்டன், ஜம்மு, ஜெய்சால்மர், ஜோத்பூர், குலு மணாலி, லே, லூதியானா, பதான்கோட், பாட்டியாலா ஆகிய விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்