தனது கணவரின் சிறுநீரகத்திற்கான சிகிச்சைக்காக உறுப்பு தானம் செய்த மனைவியின் கணவரைக் காப்பாற்ற, தானும் தனடு உறுப்பை தானம் செய்த சம்பவம், தலைநகர் டெல்லியில் அரங்கேறியுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த இரண்டு குடும்பங்கள், இறுதி நிலை சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட தங்கள் குடும்பத்தின் ஆண் உறுப்பினர்கள் தவிப்பதைக் கண்டு கவலையில் ஆழ்ந்த நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவர்களது கணவர்களுக்கு உறுப்புகள் யாருடையதும் பொருந்தாத காரணத்தால் துக்கத்தில் தத்தளித்த நிலையில், இரு குடும்பத்துக்கும் அவரவர் நிலை குறித்து தெரியவந்துள்ளது.
மேலும் படிக்க | கல்லீரலையும் நிலத்தையும் விட்டுக்கொடுத்து, குழந்தையை மீட்ட தந்தை! நெகிழ வைத்த வைரல் சம்பவம்!
இதனை அடுத்து, ஒரு மனைவி, மற்றொரு குடும்பத்திற்கு உதவி செய்ய தானம் செய்ய ஒப்புக் கொண்ட நிலையில், ஒரு ஆண் உருப்பினர் காப்பாற்றப்பட்டார். ஆனால், தனது கணவரது நிலையே இங்கு மோசமாக இருப்பதை காப்பாற்றப்பட்ட குடும்பத்திற்கு தெரிவித்ததை அடுத்து, காப்பாற்றப்பட்ட நோயாளியின் மனைவி பாதிக்கப்பட்ட மற்றொருவருக்கு உதவி செய்ய முன்வந்துள்ளார்.
மேலும் படிக்க | மாணவியின் உடலுறுப்புகள் தானம் செய்த பெற்றோர்!
அதிர்ஷ்டவசமாக யாருடையதும் பொருந்ததாத அக்கணவன்மார்களுக்கு, மற்றொருவரின் மனைவி உறுப்புகள் பொருந்தியதை அடுத்து, இரண்டு கணவர்களும் காப்பாற்றப்பட்டனர்.
'ஸ்வாப் ட்ரான்ஸ்பிளான்ட்', அதாவது, தொடர்பில்லாத இருவர், தானம் மூலம் தொடர்பு கொள்ளும் சிகிச்சை முறை முதன்முறையாக இந்தியாவில் நடைபெற்றுள்ளதை, அம்மருத்துவமனை மருத்துவர்கள் கர்வமாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.