சென்னை அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்களின் விடுதி சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரில் இருக்கிறது. இங்கு மருத்துவ மாணவர்கள் போதைப்பொருள் உட்கொள்வதாக ராஜீகாந்தி அரசு மருத்துவமனையின் முதல்வர் தேரணி ராஜன் அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து போலீசார் நேற்று மாணவர்களின் அறைகளில் அதிரடி சோதனை நடத்தினர். குறிப்பாக விடுதியின் டவர் 3-ல் தங்கியிருந்த பயிற்சி மருத்துவர்கள் தருண், சஞ்சய் ரத்தினவேல், ஜெயந்த், கார்த்திக் ஆகியோரின் அறைகளில் சோதனை நடத்தினர்.
இதில் 150 கிராம் கஞ்சா, கேட்டமைன் ஊசி வடிவில் வைத்து இருந்தவைகள் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டது. பயிற்சி மருத்துவர்கள் போதைப்பொருள் உட்கொண்டு வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக ஜெயந்த் மற்றும் தருண் அறையிலிருந்து 110 கிராம் கஞ்சா கார்த்திக் அறையிலிருந்து 15 கிராம் கஞ்சா சஞ்சய் அறையில் இருந்து 34 கிராம் கஞ்சா ஆகியவை சிக்கியது. இதையடுத்து போலீசார் பயிற்சி மருத்துவர்கள் ஜெயந்த், தருண், சஞ்சய் ரத்தினவேல் ஆகியோரை கைது செய்தனர். 2 மாணவர்கள் தப்பி ஓடி விட்டனர்.
பிறகு ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் கைதான பயிற்சி மருத்துவர்களை போலீசார் ஆஜர்படுத்தினர். நீதிமன்றம் அனைவரையும் ஜாமீனில் விடுத்தது. பயிற்சி மருத்துவர்கள் தருண், சஞ்சய் ரத்தினவேல், கார்த்திக், ஜெயந்த் ஆகியோர் மீது போலீசார் போதைப்பொருள் தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பயிற்சி மருத்துவர்களுக்கு யார் போதைப்பொருள் சப்ளை செய்கிறார்கள்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், கோட்டூர்புரம் பகுதியில் இருந்து தான் கஞ்சா சப்ளை நடந்தது தெரிய வந்தது. இதையடுத்து கோட்டூர்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவ மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த சைதாப்பேட்டையைச் சேர்ந்த
ரோட்னி ரோட்டரிக்கோ என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவரிடம் இருந்து ஒரு கிலோ 400 கிராம் கிரீன் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைதான ரோட்னி ரோட்டரிக்கோவுக்கு கஞ்சா எங்கு வருகிறது? மருத்து கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா சப்ளை செய்து வந்ததாக கூறப்படுகிறது. பின்னணியில் உள்ள கும்பல் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்