2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் மட்டுமே இருக்கக்கூடிய நிலையில் திமுக தேர்தல் பணிகளை விரைந்து முன்னெடுத்து வருகிறது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 200 தொகுதிகளுக்கு மேல் இலக்கு வைத்து திமுக தேர்தல் பணிகளை விரைந்து மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் பாஜகவை காலூன்ற விடக்கூடாது என்பதற்காக திமுக தொடர்ந்து உழைத்து வருகிறது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் பிரிந்த அதிமுக பாஜக கூட்டணி தற்பொழுது மீண்டும் கூட்டணியை அமைத்து இருக்கிறது. இந்த கூட்டணியை வெற்றி பெற வைக்க கூடாது என்பதற்காக தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை திமுக எடுத்து வருகிறது.
திருமா உறுதி!
இந்த நிலையில் தான், “திமுக -வோடு பேசி நாங்களும் கூடுதல் இடங்களை கேட்டு பெறுவோம் சொல்லியிருந்தார். ஆனால் தற்போது, “கூட்டணி நலனையும் வெற்றியையும் கருத்தில்கொண்டு திமுக -விடம் தொகுதிகள் கேட்போம், கூடுதல் தொகுதிகளை கேட்கும் கோரிக்கை நிறைவேறாவிட்டாலும் திமுக கூட்டணியில்தான் இருப்போம்” என உறுதிபட கூறியிருக்கிறார் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள்.
செல்வப்பெருந்தகை வியூகம்
தற்போது மதிமுக உள்ளிட்ட சில காட்சிகள் திமுக -விலிருந்து வெளியேறினாலும், பாமக -வை திமுக உடன் இணைக்கும் முயற்சியில் காங்கிரஸ் கட்சியின் தமிழ் நாடு மாநிலத்தலைவர் செல்வப்பெருந்தகை ஈடுபட்டுள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்தார், அவர் மரியாதையை நிமித்தமாக தான் சந்தித்ததாக கூறினாலும் அது அரசியல் ரீதியான சந்திப்பு தான் என விமர்சகர்கள் பலர் கூறியிருந்தனர்.
ஆனால் ராமதாஸை சந்தித்த பிறகு செல்வப்பெருந்தகையின் பேச்சு பாமக -திமுகவில் இணைவதையே பிரதிபலிக்கிறது. சமீபத்தில் "2011-ம் ஆண்டு போல் விசிகவும், பாமகவும் ஒரே கூட்டணியில் இருக்க வேண்டும்" என செல்வப்பெருந்தகை பேசியிருந்தார்.
ஆனால் செல்வப்பெருந்தகையின் இந்த பேச்சை வன்னியரசு கடுமையாக விமர்சித்திருந்தார். “தமிழகத்தில் காங்கிரஸ் வலிமையாகவா இருக்கிறது. எங்களுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என கூறுகிறோம். நான் கூட்டணி கட்சியை குறைத்து மதிப்பிடவில்லை.அதேநேரம், காங்கிரஸின் வலிமை குறித்து தமிழகத்தில் கருத்துகணிப்பு நடத்தினால் உண்மை தெரியவரும். தமிழகத்தில் காங்கிரஸுக்கு என்ன இருக்கிறது? அகில இந்திய அளவில் ராகுல்காந்தி என்னும் தலைவர் சிறப்பாக செயல்படுகிறார். அதன் தொடர்ச்சியாகவே காங்கிரஸை பார்க்க வேண்டியிருக்கிறது. விசிகவுக்கு செல்வப்பெருந்தகை தலைவர் இல்லை. இன்று அவர் ஒரு கட்சியில் இருப்பார், நாளை ஒரு கட்சிக்கு செல்வார். இதுதான் அவருடைய கடந்த கால வரலாறு. விசிக குறித்து பேச அவருக்கு தார்மீக உரிமை இல்லை. பாஜக, பாமகவோடு சேர மாட்டோம் என விசிக தலைவர் தெளிவாக கூறிய நிலையில், பாமகவோடு சேருங்கள் என சொல்வது அவர் வேலையல்ல. பாஜகவும், காங்கிரஸும் சேர வேண்டும் என நாங்கள் சொன்னால் அவர் ஏற்றுக் கொள்வாரா? “ என காட்டமாக பேசியுள்ளார்.
இதனால் திமுக கூட்டணிக்குள் சிறு சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.