Covai suicide attempt news in tamil Admin
தமிழ்நாடு

"எரியுது.. உடம்பெல்லாம் எரியுது!".. கண்ணிமைக்கும் நொடியில் காப்பாற்றிய போலீசார் - கள்ளத்தொடர்பால் மனம் நொந்த பெண் செய்த சம்பவம்!

எரியுது, எரியுது என்று அவர் கதறினார். அதன் பிறகு போலீசார் அவரை வாகனத்தில் ஏற்றி போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

Anbarasan

கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று (07.04.2025) காலை பொதுமக்களிடம், இருந்து மனுக்கள் பெறும் இடத்தில், "கலெக்டர் பவன் குமார்" மனுக்களை வாங்கிக் கொண்டு இருந்தார். கலெக்டர் அலுவலக வாசல் வழியாக மனு கொடுக்க வரும் பொதுமக்களை அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் சோதனை செய்து உள்ளே அனுப்பிக் கொண்டு இருந்தனர். மக்கள் தடை செய்யப்பட்ட மண்ணெண்ணெய், பெட்ரோல் போன்ற பொருட்கள் எடுத்து வருவதை தடுக்க இந்த சோதனை நடந்து கொண்டு இருந்தது.

இந்த நிலையில் இதை மீறி உள்ளே நுழைந்த, ஒரு பெண் மனு கொடுக்க செல்லும் இடத்திற்கு முன்பு திடீரென அவர் கொண்டு வந்து இருந்த மண்ணெண்ணெய் உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால். கலெக்டர் அலுவலகத்திற்குள் பரபரப்பு ஏற்பட்டது.

உடனே அங்கு நின்ற பெண்போலீசார் அந்தப் பெண்ணை மீட்டு அவசர அவசரமாக வெளியில் அழைத்துச் சென்றனர். விசாரணையில் அவர் பொள்ளாச்சி கரட்டுப்பாளையம் சமத்துவ நகரை சேர்ந்த வெள்ளியங்கிரி என்பவரின் மனைவி நந்தினி என்பது தெரியவந்தது.

விசாரணையில் நந்தினி, அரசு பஸ் கண்டக்டர் ஆன தனது கணவருக்கும், விருதுநகரை சேர்ந்த பெண் ஒருவருக்கும் பழக்கம் இருந்து வருவதாகவும் இதனால், அவர் தன்னிடத்தில் விவாகரத்து கேட்டு வருவதாகவும். தனது குழந்தைகளுடன் சிரமப்பட்டு வரும் தனக்கு உதவும் படி, போலீசாரிடம் கடந்த மார்ச் மாதம் 18 ஆம் தேதி புகார் அளித்தும் . நடவடிக்கை எடுக்காததால் இது போன்ற முடிவை எடுத்ததாக கூறி கண்ணீர் வடித்தார். அப்போது மண்ணெண்ணெயை உடலில் இருந்து அகற்றுவதற்காக போலீசார் அவர் மீது சோப்பு ஷாம்பு போட்டு தண்ணீர் ஊற்றி கழுவினர். இதனால் எரியுது, எரியுது என்று அவர் கதறினார். அதன் பிறகு போலீசார் அவரை வாகனத்தில் ஏற்றி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்