சமீபத்தில் நடந்த ஒரு கிரிக்கெட் போட்டியின் போது, தமிழக மனிதவளத்துறை அமைச்சர் டி. சரத்குமார் வெள்ளை நிறப் பொடி போன்ற ஒரு பொருளைக் கையாள்வது போன்ற தேதியிடப்படாத காணொளி ஒன்று இணையத்தில் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. அவர் பயன்படுத்திய அந்த வெள்ளை நிற பவுடர் போன்ற பொருள் போதைப்பொருள் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், அந்தக் காணொளி விரைவாக வைரலானது.
இருப்பினும், சரத் குமார் அந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்து, காணொளியில் காணப்பட்ட பொருள் தனது மகளுக்கான மருந்து என்றும், அது தடைசெய்யப்பட்ட பொருள் அல்ல என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். அமைச்சர், சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தானும், தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களும் சென்னை சேப்பாக்கில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் கிரிக்கெட் போட்டியைப் பார்க்கச் சென்றிருந்தபோது அந்தக் காணொளி பதிவு செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியபடி, அவரது மகளுக்கு சளி தொடர்பான அறிகுறிகள் ஏற்பட்டதால், அவருக்கு உடனடியாக மருந்து தேவைப்பட்டதாகவும், மாத்திரையைச் சரியாக விழுங்குவதற்கு அவரால் முடியாது என்பதாலும், மருந்தை நசுக்கிக் கொடுத்ததாக அவர் கூறியுள்ளார். சம்பவத்தின் போது அங்கிருந்த அவரது மனைவியும், இதை உறுதிப்படுத்தியதோடு, அன்று நடந்ததில் அசாதாரணமான எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அந்தக் காணொளியைச் சுற்றி தற்போது உருவாக்கப்பட்டு வரும் கதையாடல் “முற்றிலும் பொய்யானது” என்றும் அமைச்சர் கூறியுள்ளார். அன்று குடும்பத்துடன் சென்ற நண்பர்களில் ஒருவர், மைதானத்தில் அந்த வீடியோவைச் சாதாரணமாகப் பதிவு செய்ததாக அவர் மேலும் விளக்கினார். அவர் கூற்றுப்படி, அந்தக் காணொளி எந்தவித கவனத்தையும் சர்ச்சையையும் ஈர்க்காமல், அந்த நேரத்தில் சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்டது. மேலும், இதை பார்த்த இணையவாசிகள், அதை ஏன் "ThugLife moment" என குறிப்பிடவேண்டும் என்றும், அந்த வீடியோவில் மனைவி இருக்கிறாரே தவிர்த்து குழந்தை இல்லையே என்றும் கூறிவருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.