நாட்டிலேயே ஊழலை ஒழிக்க பிறந்தவர் போல் அண்ணாமலை நடந்து கொள்கிறார் - கே.பி. முனுசாமி.

நாட்டிலேயே ஊழலை ஒழிக்க பிறந்தவர் போல் அண்ணாமலை நடந்து கொள்கிறார் - கே.பி. முனுசாமி.

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர் கேபி. முனுசாமி கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் 'பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆட்சியில் இருந்த அனைத்து கட்சிகளின் சொத்து மற்றும் ஊழல் பட்டியல் வெளியிடுவேன் என தெரிவித்த கருத்திற்கு பதிலளித்து பேசிய அவர், 
"அண்ணாமலை திமுக ஆட்சியின் நிர்வாகிகள், அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளார். அதிமுகவை பொறுத்தவரை அரசியல் கட்சித் தலைவராகவோ அல்லது  பாஜக கட்சியின் தலைவராகவோ  இருந்து இந்த ஊழல் பட்டியலை வெளியிட்டாரா அல்லது தனிப்பட்ட முறையில் அண்ணாமலை வெளியிட்டாரா  என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன், எனக் கூறினார். 

மேலும், பாஜக சார்பில் வெளியிட்டு இருந்தால் குறைந்தபட்சம் அவர்கள் ஆட்சியில் இருந்த மாநிலத்தை தவிர எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருக்கின்ற ஆந்திரா ஒரிசா, மேற்கு வங்கம், அந்த மாநிலங்களில் உள்ள பாஜக தலைவர்கள் இது போன்ற அந்த மாநிலத்தில் உள்ள தலைவர்கள் மீது ஊழல் பட்டியல்கள் வெளியிட இருக்கிறார்களா என்பதை அறிய விரும்புவதாகவும் கூறினார். 

இதையும் படிக்க;... அண்ணாமலை வெளியிட்ட சொத்து விபரம் ..... ராக்கெட் என்று பார்த்தால் புஸ்வானம் ஆகிவிட்டது ..!

ஊழலை எதிர்த்து ஜூன் மாதம் பாஜக தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை நடத்த இருப்பதாக அவர் தெரிவித்த நிலையில், அந்த கேள்விக்கு பதில் அளித்த கே.பி.முனுசாமி,  உலகிலேயே இவர் தான்  ஏதோ நாட்டுக்காகவே உழைக்க பிறந்தவர் போல் நடந்து கொள்கிறார். இந்த நாட்டுக்காக உழைத்த தலைவர்கள், அரசியல்வாதிகள், மக்கள் அதிக பேர் இருக்கின்றனர் . கட்சி ரீதியாகவும் சமூக ரீதியாகவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். ஆகவே அவர் ஏதோ கூறி இருக்கிறார். அதைப்பற்றி கருத்து கூற ஒன்றும் இல்லை என தெரிவித்தார்.

மேலும், கர்நாடக சட்டமன்ற தேர்தலில் அதிமுக.,வின் நிலைப்பாடு குறித்த கேள்விக்கு பதில் அளித்த கே.பி.முனுசாமி நாளை நடைபெற உள்ள கூட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் கழக பொதுச் செயலாளர் ஆலோசனை நடத்தி, அறிவிக்கப்படும் என்றும்  தெரிவித்தார்.

இதையும் படிக்க;... பிரதமர் பதவியில் இருந்து மோடியை இறக்கும் வரையில்......