புழல் சிறையில் கேரம் விளையாட்டால் வந்த வினை!

புழல் சிறையில் கேரம் விளையாட்டால் வந்த வினை!
Published on
Updated on
1 min read

புழல் சிறையில் கேரம் விளையாடுவதில் கைதிகள் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க வந்த சிறை காவலர்களை தள்ளிவிட்டு மோதல் நடந்ததில் இரண்டு கைதிகள் காயமடைந்துள்ளர். 

சென்னை புழல் மத்திய சிறையில் சுமார் 3000க்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் விசாரணை பிரிவில் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் இருதரப்பினராக நேற்று கேரம் விளையாடியுள்ளனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறி தாக்கியதில் சிரில்ராஜ், சதீஷ் ஆகிய இருவர் காயமடைந்தனர். 

அப்போது அங்கிருந்த சிறைக்காவலர் சாம் ஆல்பர்ட் என்பவர் மோதலை தடுக்க சென்ற போது அவரையும் பிடித்து கீழே தள்ளிவிட்டுள்ளனர். இதுதொடர்பாக சிறை அதிகாரிகள் புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் கைதிகள் நாகராஜ், பாலா, ஜான், தீனா, வினோத் ஆகிய 5பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

புழல் சிறையில் கேரம் விளையாடி கொண்டிருந்த இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com