நியூ ஜெர்சியைச் சேர்ந்த ஆசிரியரும் இசைக்குழு இயக்குநருமான ஒருவர், வெறும் 13 வயதாக இருந்த மாணவியை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் அந்த மாணவியை 40க்கும் மேற்பட்ட முறை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும், பள்ளியில் அருவருப்பான பாலியல் செயல்களில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்தியதாகவும் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். ப்ளூம்ஃபீல்ட் நடுநிலைப் பள்ளியின் இசைக்குழு இயக்குநரும், ப்ளூம்ஃபீல்ட் உயர்நிலைப் பள்ளியின் உதவி இயக்குநருமான 37 வயதான டேனியல் பர்பேங்க், பல ஆண்டுகளாக அந்த 13 வயது சிறுமியை துன்புறுத்தியதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்ற பிரமாணப் பத்திரத்தின்படி, பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நபர், மன்ரோவில் வசிக்கும் பர்பேங்க் என்பவர், அந்த 13 வயது சிறுமியை 40க்கும் மேற்பட்ட முறை பாலியல் உறவு கொள்ளும்படி கட்டாயப்படுத்தியதாகவும், பல சந்தர்ப்பங்களில் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார். நீதிமன்ற ஆவணங்களின்படி, ஒரு கட்டத்தில் ஆசிரியர் அந்தக் குழந்தையை நடுநிலைப் பள்ளியில் உள்ள இசைக்கருவிகள் வைக்கும் அறைக்குள் அழைத்துச் சென்று பாலியல் ரீதியாகத் துன்புறுத்த முயன்றார் என்றும் கூறப்படுகிறது.
உயர்நிலைப் பள்ளி கலையரங்கில் ஆசிரியர் குழந்தையை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்தத் துன்புறுத்தல் எவ்வளவு காலம் நீடித்தது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், பாதிக்கப்பட்டவர் நடுநிலைப் பள்ளியிலிருந்து உயர்நிலைப் பள்ளிக்கு மாறியபோதும், பர்ன்பேங்க் இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்ததாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்த, குற்றச்சாட்டுகள் மற்றும் கைது நடவடிக்கையைத் தொடர்ந்து, பர்ன்பேக்கை விடுப்பில் அனுப்பியதாக ப்ளூம்ஃபீல்ட் பள்ளி மாவட்டம் தெரிவித்துள்ளது. பர்ன்பேங்க் மீது பாலியல் வன்கொடுமை, கடுமையான பாலியல் வன்கொடுமை முயற்சி, பாலியல் தொடர்பு, சட்டவிரோதக் கட்டுப்பாடு, குழந்தையின் நலனுக்கு ஆபத்தை விளைவித்தல் மற்றும் ஆசை காட்டி அழைத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.