“என்னோடு உடலுறவு கொள்!” மறுத்த தாய் மீது கொலைவெறித் தாக்குதல்.. 7 வயது மகன் கண்முன்னே நடந்த கொடூரம்!

டேவிஸ் கிரில்லை எடுத்து அந்த நபரை தாக்க முயன்றபோது, ​​குற்றம் சாட்டப்பட்ட நபர் கத்தியை எடுத்து டேவிஸைக் குத்தியதாகக் கூறப்படுகிறது.
Brooklyn stabbing
Brooklyn stabbing
Published on
Updated on
1 min read

தன்னை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் ஒரு நபர் மீண்டும் தன்னை உடலுறவு கொள்ள அழைத்து அதற்கு மறுத்ததால், 30 வயது தாய் ஒருவர் அமெரிக்காவின் புரூக்ளினின் லிங்கன் டெரஸ் பூங்காவில் தனது சிறு மகன் மற்றும் நண்பர்கள் கண்முன்னே கத்தியால் குத்தி தப்பி சென்றுள்ளவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

கத்தியால் குத்திய சந்தேக நபரை காவல்துறை இன்னும் தேடி வருகிறது. மேலும், குற்றத்தைச் செய்ததாகச் சந்தேகிக்கப்படும் நபரின் புகைப்படத்தை வெளியிட்டு, அவரைக் கண்டுபிடிப்பதற்குப் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஷகீமா டேவிஸ் (பாதிக்கப்பட்டவர்), தனது நண்பர்கள் மற்றும் 7 வயது மகனுடன் அப்பகுதியில் நள்ளிரவில் பார்பிக்யூ விருந்து ஒன்றில் கலந்துகொண்டுள்ளார். ​​இப்போதான் இந்த சமத்துவம் அரங்கேறியுள்ளது.

அந்த நிகழ்விற்காக 10-15 பேர் அந்த பூங்காவில் கூடியிருந்ததாகவும், குற்றம் சாட்டப்பட்ட நபர் , ஒரு காலத்தில் டேவிஸுடன் உறவில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், அங்கு கூடியிருந்தவர்கள் முன்னிலையில் டேவிஸிடம் மீண்டும் மீண்டும் தன்னோடு பாலியல் உறவுகொள்ள கோரியதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மேலும், டேவிஸ் இதனை தொடர்ச்சியாக மறுத்து வந்துள்ளார். அந்த நேரத்தில் டேவிஸுக்கும் கத்தியால் குத்தியதாகக் கூறப்படும் நபருக்கும் இடையே வாக்குவாதமாக மோசமடைந்துள்ளது என்று காவல்துறை அதிகாரிகளால் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில், ஆத்திரத்தில் அந்த நபர் மீது டேவிஸ் ஒரு பானத்தை வீசியுள்ளார். அதற்குப் பதிலடியாக அந்த நபர் டேவிஸைத் தாக்கியுள்ளார். மேலும், டேவிஸ் கிரில்லை எடுத்து அந்த நபரை தாக்க முயன்றபோது, ​​குற்றம் சாட்டப்பட்ட நபர் ஒரு கத்தியை எடுத்து டேவிஸைக் குத்தியதாகக் கூறப்படுகிறது.

டேவிஸின் உடலிலும் தலையிலும் கத்திக்குத்து காயங்கள் ஏற்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அவரது 7 வயது மகன் உட்பட, ஒரு பெரிய கூட்டம் கூடியிருந்தபோதே இந்தக் கத்திக்குத்து சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கூறபடுகிறது. இதனையடுத்து, டேவிஸ் மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால், அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்களால் அறிவிக்கப்பட்டது. மேலும், இந்த மொத நிகழ்வும் அவரது 7 வயது மகனின் கண்முன்னே நடந்துள்ளது. பெற்ற குழந்தையின் முன்பு ஒரு தாயை அவமரியாதை செய்வதை ஒருக்காலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று டேவிஸின் தோழி செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

மேலும், உயிரிழந்தவரின் தாயான 60 வயது ஆத்ரா பெக்யூஸ், தன் மகளும் அந்த நபரும் ஒருமுறை மட்டுமே டேட்டிங் செய்ததாகவும், தன் மகளுக்கு அவர் மீது ஈர்ப்பு ஏற்படவில்லை என்று தன்னிடம் கூறியதாகவும் அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். தேடப்படும் நபரின் புகைப்படத்தை காவல்துறையினர் வெளியிட்டு அவரை பிடிக்க பொதுமக்கள் உதவுமாறும் காவல்துறை தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com