
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நல்லொச்சான் பட்டியைச் சேர்ந்தவர் 35 வயதுடைய சதீஸ்குமார். இவர் வீட்டின் அருகிலேயே பால் பண்ணை வைத்து நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இவருக்கு அதே [பகுதியை சேர்ந்த பெண்ணுடன் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகள் உள்ளார். சதிஷ்குமாரின் மகளும், அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த 13 வயதுடைய சிறுமியும் ஒரே பள்ளியில் பயின்று வருகின்றனர்.
சதீஷ்குமார் தினசரி தனது மகளை பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழைத்து வரும்போது மகளின் தோழியான 13 வயது சிறுமியையும் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்து வருவதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். மேலும் சிறுமிகள் இருவரும் அடிக்கடி ஒன்றாக விளையாடுவது எங்கும் சென்றாலும் ஒன்றாக செல்வது என பழகி வந்த நிலையில் 13 வயது சிறுமி அடிக்கடி சதிஷ் வீட்டுக்கு வந்து சென்றுள்ளார்.
அதுபோல ஒரு நாள் 13 வயது சிறுமி சதீஷ் வீட்டுக்கு அவருடைய மகளுடன் விளையாட சென்றுள்ளார் அப்போது வீட்டில் சதீஷின் மனைவி மற்றும் மகள் இல்லாத நிலையில் அவர் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார் மேலும் இது குறித்து வெளியில் சொன்னால் கொன்று விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார். இதனால் பயந்த சிறுமி தனது பெற்றோரிடம் இது குறித்து தெரியப்படுத்தாமல் இருந்துள்ளார். ஆனால் இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சதீஷ் மாணவியை மிரட்டி அவ்வப்போது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக 13 வயது சிறுமிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்ட நிலையில் பெற்றோர் அவரை உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த போது அவர் 5 மாத கர்ப்பிணியாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியிடம் கேட்ட போது சதீஸ்குமார் தன்னை துன்புறுத்தி அதை யாரிடமும் சொன்னால் கொன்றுவிடுவதாக மிரட்டியதாக கூறியுள்ளார். பின்னர் இது குறித்து பெற்றோர் உசிலம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தனர்.
பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் சதீஷ்குமாரின் மீது வழக்கு பதிவு செய்தனர். இது குறித்து அறிந்து தப்பி ஓடிய குற்றம் சாட்டப்பட்ட சதீஸ்குமாரை உசிலம்பட்டி டிஎஸ்பி சந்திரசேகரன் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். தனது மகளின் தோழியான 13 வயது பள்ளி சிறுமியை கர்ப்பிணியாக்கிய சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.