
திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியை சேர்ந்தவர் 78 வயதான கந்தசாமி. இவருக்கு பொன்னம்மாள் என்ற மனைவியும் இருமகன்களும், இரு மகள்களும் உள்ள நிலையில் கணவனும் மனைவியும் பெரிய மகனான 55 வயதான அண்ணாதுரை வீட்டில் தங்கி வாழ்ந்து வந்துள்ளனர். அண்ணாதுரையும் கந்தசாமியும் நிலத்தில் விவசாயம் பார்த்து குடும்பத்தை கவனித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே அண்ணாதுரை தாய் தந்தையை சரிவர கவனிக்காமல் இருந்துள்ளார். உணவு கூட கொடுக்காமல் பட்டினி போட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் கந்தசாமிக்கும் அண்ணாதுரைக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை வந்துள்ளது. எனவே தந்தை கந்தசாமி அண்ணாதுரையின் மீது கோபத்தில் இருந்துள்ளார்.
வழக்கம் போல் நேற்று இரவு சாப்பிடும் போதும் தந்தைக்கும் மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் குடும்பத்தார் சமாதானம் செய்த நிலையில் இருவரும் சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு வெளியில் வாசலில் படுத்து உறங்கியுள்ளனர். ஆனால் கந்தசாமி பெற்று வளர்த்த மகன் வயதானதும் தங்களை கவனிக்காமல் இவ்வாறு செய்வதால் மகனின் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார்.
எனவே அனைவரும் ஆழ்ந்து உறங்கிய பின்னர் இரண்டு மணியளவில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து உறங்கிக்கொண்டிருந்த அண்ணாதுரையை சரமாரியாக வெட்டியுள்ளார். அண்ணாதுரையின் சத்தம் கேட்டு எழுந்த குடும்பத்தார் மற்றும் அக்கம் பக்கத்தினர் இது குறித்து போலீசில் தகவலாளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கந்தசாமியை கைது செய்துள்ளனர்.
மேலும் அண்ணாதுரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விட்டு கந்தசாமியின் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். தந்தையே மகனை அரிவாளால் வெட்டி கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.