
ஓசூரில் ஆன்லைன் வர்த்தகத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் தனது இரண்டு மகன்களை கழுத்தை நெறித்து கொன்றுவிட்டு தந்தை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் கற்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவபூபதி (45) இவர் ஓசூர் குறிஞ்சி நகர் பகுதியில் குடும்பத்துடன் வாடகை வீட்டில் தங்கி உள்ளார். ஆன்லைன் நெட்வொர்க் ஷேர் மார்க்கெட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பார்வதி இவர்களுக்கு நரேந்திர பூபதி (14) லதீஷ் பூபதி (11) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர் இவர்கள் ஓசூர் சமத்துவபுரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். சிவ பூபதி ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் அவருக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் சிவ பூபதி வீட்டில் நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அவரது சகோதரர் போலீசார் உதவியுடன் கதவை உடைத்து பார்த்த போது வீட்டில் சிவ பூபதி தூக்கில் தொங்கி எப்படி கிடந்துள்ளார் அருகில் அவரது இரண்டு மகன்களும் கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழந்து கிடந்தது தெரிய வந்தது அவரது மனைவி கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சொந்த கிராமத்திற்கு தூத்துக்குடி மாவட்டத்திற்கு சென்றுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து ஓசூர் அட்கோ போலீசார் சம்பவ இடத்திற்கு விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக ஓசூரில் சிவ பூபதி வாழ்ந்து வருவதாகவும், ஆன்லைன் வர்த்தகத்தை சொந்த ஊரிலும் சென்னையிலும் அவர் செய்து வந்த நிலையில் அதே தொழிலை ஓசூரில் செய்துவந்துள்ளார். தூக்கு போட்டு உயிரிழந்து கிடந்த மூன்று பேரில் உடல்களை போலீசார் மீட்டு விசாரணை நடத்துகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.