மீண்டும் ஒரு லிவிங்-ன் கொலை! “வேறொருவருடன் தொடர்பு” - ஒரே மாதத்தில் கழுத்தறுக்கப்பட்ட காதலி!

சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு வேலை வாய்ப்புக்காக இருவரும் பெங்களூருவுக்கு குடிபெயர்ந்து
murder case
Published on
Updated on
1 min read

பெங்களூருவில் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து, சிக்கிமைச் சேர்ந்த 22 வயதுப் பெண் ஒருவர் தனது காதலனால் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த பெண் சிக்கிமைச் சேர்ந்த 22 வயதான அதி ஹங்மா சுப்பா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் பெங்களூருவில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் வரவேற்பாளராகப் பணிபுரிந்து வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டுள்ள பூர்பா லெப்சா, மேற்கு வங்க மாநிலத்தின் டார்ஜிலிங்கைச் சேர்ந்தவர். அவர் அங்குள்ள ஒரு ஹோட்டலில் உணவு பரிமாறுபவராக வேலை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

முதற்கட்ட விசாரணையில், அதி ஹங்மா சுப்பா மற்றும் பூர்பா லெப்சா இருவரும் காதலித்து வந்ததாகத் தெரியவந்துள்ளது. சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு வேலை வாய்ப்புக்காக இருவரும் பெங்களூருவுக்கு குடிபெயர்ந்து, தொட்டகன்னஹள்ளி பகுதியில் ஒன்றாக வாடகை வீட்டில் வசித்து வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், உயிரிழந்த பெண்ணுக்கு வேறொருவருடன் தொடர்பு இருப்பதாக பூர்பா லெப்சா சந்தேகித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமை காலை இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த பூர்பா லெப்சா, வீட்டின் சமையலறையில் இருந்த கத்தியை எடுத்துத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

அவர் அதி ஹங்மா சுப்பாவின் கழுத்துப் பகுதியில் கத்தியால் தாக்கியதில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்திற்குப் பிறகு அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து, பெல்லந்தூர் போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். உயிரிழந்த பெண்ணின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் கத்தி உள்ளிட்ட ஆதாரங்களையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக பூர்பா லெப்சாவை கைது செய்துள்ள போலீசார், அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்து வருகின்றனர். காதல் உறவில் ஏற்பட்ட சந்தேகம் மற்றும் தகராறே கொலைக்குக் காரணமா அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com