“குடிசையில் நடந்த பயங்கரம்” - குற்றவாளியுடன் ஏற்பட்ட இரண்டாவது காதல்.. மகளை கண்டித்ததால் கொலை செய்யப்பட்ட தாய்!

இதனை அறிந்த மீனாவின் தாய் கருப்பசாமியுடனான பழக்கத்தை கை விடுமாறு கண்டித்துள்ளார்.
“குடிசையில் நடந்த பயங்கரம்” - குற்றவாளியுடன் ஏற்பட்ட இரண்டாவது காதல்.. மகளை கண்டித்ததால் கொலை செய்யப்பட்ட தாய்!
Published on
Updated on
2 min read

ராமநாதபுரம் மாவட்டம், போக்குவரத்து நகர் பகுதியில் வசித்து வந்தவர்  கருப்பாயி. இவர் கணவனை இழந்த நிலையில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார், இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கும் நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இருவருக்கும் கருப்பாயி மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளார். ஒரு வருடத்திற்கு முன்பு மூத்த மகளின்  கணவர் விபத்தில் இறந்து விட்ட நிலையில் அவர்  தன் தாயுடனே வசித்து வருகிறார். மேலும் இரண்டாவது மகள் கர்ப்பமாக உள்ள நிலையில் அவரும் மகப்பேறு காரணமாக தாய் வீட்டில் தங்கியுள்ளார். 

கணவனை இழந்து தாயுடன் வாழ்ந்து வந்த மூத்த மகளான மீனாவுக்கு  (பெயர் மாற்றப்பட்டுள்ளது)  விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி சேர்ந்த கருப்பசாமி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது நாளடைவில் காதலாக மாறி இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர். இதனை அறிந்த மீனாவின் தாய் கருப்பசாமியுடனான பழக்கத்தை கை விடுமாறு  கண்டித்துள்ளார். இருப்பினும் மீனா தனது தாய்க்கு தெரியாமல் கருப்பசாமியை சந்தித்து பேசி வந்துள்ளார்.  

Admin

 இந்நிலையில் நேற்று இரவு மீனாவை சந்திக்க கருப்பசாமி அவரது வீட்டிற்கு வந்துள்ளார். இதனை கவனித்த மீனாவின் தாய் கருப்பாயி மீனாவிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கருப்பசாமி வீட்டில் இருந்த  அரிவாளை எடுத்து கருப்பாயி கழுத்தில் வெட்டியுள்ளார். கருப்பாயி  ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த நிலையில் இதனை பார்த்து கருப்பசாமி அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். கருப்பாயி இரண்டாவது மகளின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து போலீசில் தகவல் தெரிவித்துள்ளனர்.  

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கருப்பாயின் உடலை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே கருப்பாயி இறந்து விட்டதாக தெரிவித்தனர். கருப்பாயி உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார் கொலை சம்பவம் குறித்து உயிரிழந்தவர்களின் மகள்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

Admin

மேலும் இரண்டாவது மகள் திவ்யா கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள கொலையாளி கருப்பசாமியை  தேடி வருகின்றனர்.  கொலை செய்த கருப்புசாமி மீது ஏற்கனவே  விருதுநகர் ராமநாதபுரம் மாவட்டத்தில் வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. போக்குவரத்து நகரில் குடிசை வீட்டில் வாழ்ந்து குடும்பத்தை காப்பாற்றி வரும் பெண்ணை ஒருவர் கொலை செய்த சம்பவம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com