தான் கொலைசெய்த ஒருவரின் பாகங்களை பாஸ்தாவுடன் கலந்து சாப்பிட்டதாகப் பெருமை பேசிய, தண்டனை பெற்ற கொலையாளிக்கு ஒன்பதாவது முறையாக பரோல் மறுக்கப்பட்டுள்ளது.
51 வயதான டேவிட் ஹார்க்கர், 1998-ல் டார்லிங்டனில் நான்கு பிள்ளைகளின் தாயான 32 வயதான ஜூலி பேட்டர்சனைக் கொலை செய்தார். இன்றுவரை, அவரது உடலின் ஒரு பகுதி மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. குறைக்கப்பட்ட பொறுப்புணர்வு அடிப்படையில் கொலைக்குற்றத்தை ஒப்புக்கொண்ட ஹார்க்கர், தற்போது ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.
பேட்டர்சனை கொலைசெய்தப் பிறகு , அவரது தொடையின் ஒரு பகுதியை வறுத்து, பாஸ்தா மற்றும் சீஸுடன் சேர்த்துச் சாப்பிட்டதாக அவன் தன் நண்பர்கள் மற்றும் ஒரு மனநல மருத்துவர் இருவரிடமும் கூறியிருந்த கொடூர நிகழ்வு பின்னர் தெரியவந்துள்ளது.
1999-ல் ஹார்க்கருக்குத் தண்டனை விதிக்கப்பட்டபோது அவருக்கு வயது 24. அவருக்குக் கடுமையான மனநிலை பிறழ்வு இருந்ததால், அவரைக் கொலைக் குற்றத்திற்காகத் தண்டிக்க முடியாது என்று மனநல மருத்துவர்கள் ஒப்புக்கொண்டனர். அவர் 2013-ம் ஆண்டு முதல் பரோலுக்குத் தகுதி பெற்று வருகிறார். மேலும் அவரை விடுவிக்க வேண்டுமா? அல்லது திறந்தவெளிச் சிறைக்கு மாற்ற வேண்டுமா? என்பதைத் தீர்மானிப்பதற்காக இந்த மாதம் ஒன்பதாவது விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
ஹார்க்கரின் வழக்கை சட்டப்படி தவறாமல் மறுஆய்வு செய்ய வேண்டும் என்று பரோல் வாரியம் கூறியது. மேலும், 2015 முதல் எந்த ஒழுங்கு நடவடிக்கைக் குற்றச்சாட்டுகளும் இல்லாத நிலையில், காவலில் இருந்தபோது அவரது சமீபத்திய நடத்தை "கணிசமாக மேம்பட்டுள்ளது" என்று ஒரு அறிக்கை சுட்டிக்காட்டியது. இருப்பினும், பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தைக் காரணம் காட்டி, அவரது விடுதலைக்கோ அல்லது இடமாற்றத்திற்கோ அங்கீகாரம் அளிப்பது இன்னும் பாதுகாப்பானது அல்ல என பரோல் வாரியம் தீர்மானித்துள்ளது. டேவிட் ஹார்க்கரை விடுவிக்க உத்தரவிடவோ, அல்லது அவரைத் திறந்தவெளி நிலைமைகளுக்கு மாற்றுமாறு வெளியுறவுச் செயலாளருக்குப் பரிந்துரைக்கவோ வேண்டாம் என காவல்துறை தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.