“தாயின் கள்ளக்காதலனை கொன்ற மகன்” - ஆட்டோ டிரைவருடன் ஊர் சுற்றிய இளம்பெண்… மெரினாவில் பரபரப்பு!

இந்த பழக்கமானது நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி இருவரும் ஒன்றாக வெளியில் சுற்றி திரிந்துள்ளனர்
“தாயின் கள்ளக்காதலனை கொன்ற மகன்” - ஆட்டோ டிரைவருடன் ஊர் சுற்றிய இளம்பெண்… மெரினாவில் பரபரப்பு!
Published on
Updated on
1 min read

சென்னை மாவட்டம், மெரினா கட்டுரைக்கு அடுத்துள்ள நொச்சிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் மலர் விழி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிவகுமார் என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமாகி மூன்று மகன்கள் உள்ள நிலையில் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு சிவகுமார் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். எனவே மலர்விழி ஹவுஸ் கீப்பிங் வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தி வந்திருக்கிறார். தினமும் வேலைக்கு சென்றுவிட்டு மாலை ஆட்டோவில் வீட்டுக்கு வருவதை பழக்கமாக வைத்திருந்திருக்கிறார்.

அவ்வாறு ஆட்டோவில் வரும் போது மலர்விழிக்கு ஆட்டோ ஓட்டுநரான 33 வயதுடைய அந்தோணி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி இருவரும் ஒன்றாக வெளியில் சுற்றி திரிந்துள்ளனர். இதனை அறிந்து மலர்விழியின் குடும்பத்தினர் அவரை கண்டித்துள்ளனர் இருப்பினும் தனது உறவை கைவிடாமல் தொடர்ந்து அந்தோணியுடன் பழகி வந்துள்ளார். இதனை அறிந்த மலர்விழியின் மகன்கள் அந்தோணியின் மீது கோபத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் அந்தோணி இரவு குடித்துவிட்டு ஆட்டோ ஓட்டிய நிலையில் வாகன பரிசோதனையில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அந்தோணியை சோதனை செய்து அவரது ஆட்டோவை பறிமுதல் செய்த நிலையில் காலை போதை தெளிந்ததும் காவல் நிலையத்தில் வந்து ஆட்டோவை வாங்கிக்கொள்ளுமாறு அனுப்பி வைத்திருக்கின்றனர். பின்னர் பேருந்து மூலம் மெரினா கடற்கரைக்கு சென்றுள்ளார். பின்னர் தனது கள்ளக்காதலி மலர்விழிக்கு போன் செய்து நேரில் அழைத்துள்ளார்.

அதனை தொடர்ந்து அந்தோணிக்கு உணவு எடுத்து கொண்டு வந்த மலர்விழி அவருடன் படகில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்துள்ளார். இதனை அறிந்த அவரது மூத்த மகனான 19 வயதுடைய ஆகாஷ் அவரது நண்பரான 25 வயதுடைய ஷோஷ்வாவுடன் கடற்கரைக்கு சென்று அங்கிருந்த அவரது தாயை வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறார். பின்னர் அந்தோணியுடன் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த ஆகாஷ் மற்றும் ஷோஷ்வா அருகில் இருந்த கட்டையை எடுத்து அவரை சரமாரியாக தாக்கி கொலை செய்துள்ளனர்.

காலையில் அந்தோணியின் உடலை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்தோணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் குற்றவாளியான ஆகாஷ் மற்றும் ஷோஷ்வாவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கள்ளக்காதல் விவகாரத்தில் ஆட்டோ ஓட்டுநர் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.            

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com