“சாதியை காரணம் காட்டி பிரிக்கப்பட்ட காதலர்கள்” - கர்ப்பமாக இருந்த காதலி தூக்கிட்டு தற்கொலை.. காதலன் தலைமறைவு!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன் மற்றவர்களின் பேச்சைக் கேட்டு தன்னை உதாசீனப்படுத்தினாரே என்ற ஆதங்கத்தில் மனமுடைந்த அனுசியா..
“சாதியை காரணம் காட்டி பிரிக்கப்பட்ட காதலர்கள்” - கர்ப்பமாக இருந்த காதலி தூக்கிட்டு தற்கொலை.. காதலன் தலைமறைவு!
Published on
Updated on
2 min read

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் செந்தில் ஜோதி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ள நிலையில் இளைய மகள் அனுசியா உத்திரமேரூர் தனியார் பொறியியல் கல்லூரியில் EEE இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கண்ணன் தாங்கல் பகுதியை சேர்ந்த, சஞ்சய் கண்ணன் என்ற இளைஞருக்கும் அனுசியாவிற்க்கும் காதல் ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். காதலித்து வந்த போது இருவரும் அடிக்கடி வெளியில் சுற்றி தனிமையில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது.

எனவே அனுசியா கர்ப்பமாக இருந்துள்ளார். இதனால் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என சஞ்சயிடம் அனுசியா கூறியுள்ளார். சஞ்சய் தன்னுடைய பெற்றோரிடம் அனுசியாவை திருமணம் செய்வதற்கு சம்மதம் கேட்டுள்ளார். ஆனால் அனுசுயா பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அவரை திருமணம் செய்து கொள்ள சஞ்சய்யின் பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மனமுடைந்த சஞ்சய் தனது பெற்றோர்களை பிரிந்து அனுசியா வீட்டிற்கு குடியேறியுள்ளார். அனுசுயா தரப்பில் இவர்களுக்கு திருமணம் செய்து வைப்பதாக கூறியுள்ளனர்.

இந்நிலையில் சஞ்சையின் பெற்றோர்கள், தனது உறவினரான கண்ணன் தாங்கல் ஊராட்சி தலைவரின் கணவரான விஸ்வநாதனிடம் இருவரையும் பிரித்து சஞ்சையை மீட்டு அழைத்து வரும்படி கூறியுள்ளனர். அதனைத் தொடர்ந்து கண்ணன்தாங்கல் தலைவர் கோட்டூர் தலைவர் முருகையனின் வீட்டுக்கு சென்று அனுசுயாவை அழைத்து சஞ்சய் உடன் சேர்த்து வைப்பதாக கூறி சஞ்சயை பிரித்து தங்களுடன் அழைத்து சென்றுள்ளனர். அனுசியாவையும் அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன் மற்றவர்களின் பேச்சைக் கேட்டு தன்னை உதாசீனப்படுத்தினாரே என்ற ஆதங்கத்தில் மனமுடைந்த அனுசியா கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்ய முயற்சித்த போது அக்கம் பக்கத்தினர் அனுசுயாவை காப்பாற்றியுள்ளனர். இந்த நிலையில் மீண்டும் நேற்று யாரும் இல்லாத சூழலில் அனுஷ்யா வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Admin

தகவல் அறிந்து சென்ற சுங்குவார்சத்திரம் காவல்துறையினர் அனுசியாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து. அனுசியாவின் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இளம் பெண்ணை காதலித்து திருமணம் செய்ய மறுத்ததால் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் தலைமறைவாக உள்ள சஞ்சையை கைது செய்தால் தான் நாங்கள் அனுசியாவின் உடலை வாங்குவோம் என அனுசியாவின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கூறி வருவதால் அனுசியா இறந்து இரண்டு நாளை கடந்தும் பிரேத பரிசோதனை செய்ய முடியாமல் அனுசியாவின் உடல் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனை பிணவறையில் உள்ளது.

இதனையடுத்து காதலன் சஞ்சய் கண்ணன், அவரது பெற்றோர், ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் உள்ளிட்டோரை கைது செய்ய வலியுறுத்தி எடையார்பாக்கம் சந்திப்பு சாலையில் அனுசியாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தற்போது சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com