"உடலுறவு கொள்வதற்காக" 10 மாதக் குழந்தையைப் பார்த்துக்கொள்வதாகக் கூறி அக்குழந்தையைக் கொன்றதாகக் கொலராடோவைச் சேர்ந்த நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மே 2023ல் இந்த சம்பவத்தின் போது 21 வயதாக இருந்த வில்லியம் ஜேக்கப்ஸ், கேனான் சிட்டியில் உள்ள மோட்டல் 6 ஒன்றில் 10 மாதக் குழந்தையான எட்வர்ட் ஹேய்ஸை அவனது தாயிடம் குழந்தைப் பராமரிப்புக்காகத் தானாக முன்வந்து கவனித்து கொள்வதாக கூறியுள்ளார்.
நீதிமன்ற ஆவணங்களின்படி, எட்வர்டின் தாய் வரவேற்பாளராகப் பணிபுரிந்த மோட்டலில்தான் ஜேக்கப்ஸ் தங்கியுள்ளார். இருவரும் சந்தித்து, விரைவிலேயே ஒரே அறைக்குக் குடிபெயர்ந்துள்ளனர். அந்த அறையில்தான், எட்வர்ட் பலவிதமான துன்புறுத்தல்களின் அறிகுறிகளுடன் இறந்து கிடந்துள்ளார். குழந்தையுடன் விளையாடும்போது அதைக் கடித்ததாகவும், வாந்தி எடுக்க வைக்கும் முயற்சியில் அதன் தலையில் அடித்ததாகவும் ஜேக்கப்ஸ் ஒப்புக்கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் நடந்த நேரத்தில் அந்த மோட்டலில் தங்கியிருந்த ஒரு செவிலியர் ஒருவர், தனது பக்கத்து அறையிலிருந்து நடந்ததைக் கேட்டதாகக் கூறியுள்ளார். இறுதியாக, அவர் எட்வர்டின் நிலையைக் கண்டு, 911-க்கு அழைப்புவிடுத்துள்ளார். மேலும் குழந்தை சுயநினைவின்றி இருந்ததால், குழந்தைக்கு முதலுதவி செய்யத் தொடங்கியுள்ளார். பின்னர் எட்வர்ட், மருத்துவ ஹெலிகாப்டர் மூலம் கொலராடோ ஸ்பிரிங்ஸில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்களால் அறிவிக்கப்பட்டது.
குழந்தையைக் கடைசியாகப் பார்த்துக் கொண்டவர் அவர்தான் என்று நம்பப்படுவதால், ஜேக்கப்ஸ் மீது குற்றம் சாட்டப்பட்டது. எட்வர்ட் இறந்துவிட்டதாக அறிவிக்கப்படுவதற்கு முன்பே, ஜேக்கப்ஸ் ஒரு கொடும் குற்றமான குழந்தை துஷ்பிரயோகக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தார். அதைத் தொடர்ந்து, அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் உடனடியாக அவர் மீது முதல் நிலை கொலைக் குற்றச்சாட்டையும் சேர்த்தனர்.
சம்பவம் நடந்தபோது 20 வயதாக இருந்த, குழந்தையின் தாயான புரூக் கிராஃபோர்ட் மீது, கடுமையான குழந்தை துஷ்பிரயோகக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இருப்பினும், அரசு வழக்கறிஞர்கள் இறுதியில் அதனை ஒரு சிறு குற்றமாகக் குறைத்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தபோது அவர் பணியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து குழந்தையின் தாய் கூறியது, “நான் இதை மிகவும் வெளிப்படையாகச் சொல்லப் போகிறேன். இந்தக் குழந்தையின் மீது அவனுக்குச் சிறிதும் அக்கறை இல்லை. துளியும் இல்லை. அவன் உடலுறவு கொள்வதற்காகவும், தூங்குவதற்கு ஓர் இடம் கிடைப்பதற்காகவும் மட்டுமே அந்தக் குழந்தையைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். அவ்வளவுதான். இவ்வளவு வெளிப்படையாகப் பேசுவதற்கு மன்னிக்கவும், ஆனால் சத்தியமாக, இதுதான் நடந்துகொண்டிருக்கிறது,” என்று அவர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். இதனையடுத்து, கொலராடோ மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் மூன்று உறுப்பினர்களும் அந்த மேல்முறையீட்டை ஏற்றுக்கொண்டனர். நீதிமன்றத்தின் தீர்ப்பில், நீதிபதி எலிசபெத் எல். ஹாரிஸ், "தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட வழக்கறிஞரின் அத்துமீறிய அரசாங்க நடத்தை" காரணமாக இந்தத் தள்ளுபடி நியாயப்படுத்தப்படவில்லை என்று கூறினார்.
"இந்த வழக்கில் ஸ்டான்லியின் செயல்களை நாங்கள் மன்னிக்கவில்லை. மேலும், அவரது நடத்தை சாதாரண அர்த்தத்தில் 'அதிர்ச்சியூட்டும்' ஒன்றாகக் கருதப்பட்டாலும், வழக்குச் சட்டத்தில் வகுக்கப்பட்டுள்ளபடி, அதிர்ச்சியூட்டும் அரசாங்க நடத்தையைக் கண்டறிவதற்கான கடுமையான அளவுகோலை அது பூர்த்தி செய்யவில்லை என்று நாங்கள் முடிவு செய்கிறோம்," என அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.
மேலும், மறுவிசாரணை நடைபெற்று வருவதால், ஜேக்கப்ஸ் வரும் நாட்களில் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.