மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் 27 வயதுடைய தேவா. இவர் சிறுவயதிலிருந்தே குடும்பத்துடன் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் வசித்து வந்தார். தேவா கூலித்தொழில் செய்து வந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த 26 வயதுடைய இந்திராணி என்பவருடன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு தற்போது மூன்று வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் கடந்த (டிச 26) ஆம் தேதி தேவா காணாமல் போன நிலையில் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் தேவா கிடைக்காமல் இருந்தார். எனவே தேவாவின் உறவினர்கள் காவல் நிலையத்தில் அவரை கண்டுபிடித்து கொடுக்குமாறு புகாரளித்தனர். அதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தேவா காணாமல் போனதை பற்றி அவரது மனைவியிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்திருக்கிறார்.
எனேவ சந்தேகமடைந்த போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை செய்து வந்த நிலையில் காவல் நிலையத்திற்கு வந்த இந்திராணி “நான் தான் எனது உறவினர்களுடன் சேர்ந்து தேவாவை கொலை செய்து உடலை ரயில் நிலையத்தில் வீசினேன்” என கூறி சரணடைந்தார். இதையடுத்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திராணிக்கு கரூரில் உள்ள ஓட்டலில் வேலை செய்யும் 41 வயதுடைய வினோத்குமார் என்பவருடன் திருமணத்திற்கு மீறிய உறவு ஏற்பட்டு இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்த நிலையில் இது குறித்து தேவாவிற்கு தெரியவந்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த தேவா இந்திராணி மற்றும் வினோத்குமாரை கண்டித்ததாக சொல்லப்படுகிறது. எனவே தேவாவை கொலை செய்த முடிவு செய்த இந்திராணி கடந்த (டிச 25) தேதி இரவு வினோத்குமாரை வீட்டிற்கு வரவழைத்து அவருடன் சேர்ந்து தேவாவை கத்தியால் குத்தி கொலை செய்து பின்னர் உடலை ஆம்புலன்ஸ் மூலம் எடுத்து சென்று ரயில் நிலையத்தில் தற்கொலை செய்து கொண்டது போல வீசி விட்டு சென்றது தெரியவந்துள்ளது. மேலும் கள்ளத் தொடர்பில் இருந்த வினோத்குமார் இந்திராணிக்கு சித்தப்பா முறை உறவினர் என்பதும் தெரியவந்திருக்கிறது. திருமணத்திற்கு மீறிய உறவால் மனைவியே கணவனை கொன்று உடலை ரயில் நிலையத்தில் வீசிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.