“சுத்தியலால் அடித்துக் கொல்லப்பட்ட தாய்” - அண்ணன் கட்டிய வீட்டை கேட்டு அடாவடி செய்த தம்பி.. சொத்துக்காக மிருகமாக மாறிய மகன்!

ஆத்திரம் அடைந்த சந்தோஷ் அருகில் இருந்த சுத்தியலை எடுத்து தனது தாயின் முகத்தில் சரமாரியாக...
“சுத்தியலால் அடித்துக் கொல்லப்பட்ட தாய்” - அண்ணன் கட்டிய வீட்டை கேட்டு அடாவடி செய்த தம்பி.. சொத்துக்காக மிருகமாக மாறிய மகன்!
Published on
Updated on
2 min read

ஈரோடு மாவட்டம், அனுமன்பள்ளி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வந்தவர் தனபாக்கியம், இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி காங்கிரஸ் கட்சியில் நிர்வாகியாக உள்ளார். இவர்களுக்கு செந்தில் மற்றும் சந்தோஷ் என இரண்டு மகன்கள் உள்ள நிலையில் செந்தில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். மேலும் சந்தோஷிற்கு திருமணமாகி அவரது மனைவி விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் மனமுடைந்த சந்தோஷ் வேலைக்கு செல்லாமல் குடிபோதைக்கு அடிமையாகியுள்ளார்.

இந்நிலையில் செந்தில் தனியாக வீடு கட்டிக் கொண்டிருந்த நிலையில் அவருக்கு தனபாக்கியம் மற்றும் கிருஷ்ணமூர்த்தி பணம் கொடுத்து உதவி செய்து வந்துள்ளனர். இதனை அறிந்த சந்தோஷ் தனது தாயிடம் “அண்ணன் வீட்டுக்கு நீங்க கூட காசு குடுக்குறீங்களா அப்போ அந்த வீட்டை அவன் கிட்ட கேட்டு என் பேருக்கு எழுதி தாங்க” என கேட்டுள்ளார். இதனை கேட்டு ஆத்திரமடைந்த தாய் சந்தோஷை கண்டித்து வேறு சில சொத்துக்களை உனது பெயருக்கு எழுதி தருகிறோம் என உறுதியளித்திருக்கிறார். இருப்பினும் தினமும் குடித்துவிட்டு வந்து செந்தில் வீட்டை கேட்டு சந்தோஷ் தனது தாயுடன் வாக்குவாதம் செய்து வந்ததாக சொல்லப்படுகிறது.

Admin

வழக்கம் போல்  நேற்று இரவு மதுபோதையில் வீட்டுக்கு சென்ற சந்தோஷ்  தாயிடம் வாக்குவாதம் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த சந்தோஷ் அருகில் இருந்த சுத்தியலை எடுத்து தனது தாயின் முகத்தில் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த தனபாக்கியம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்திருக்கிறார். தாய் உயிரிழந்ததை அறிந்த சந்தோஷ் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடியுள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்த கிருஷ்ணமூர்த்தி தனது மனைவியின் நிலையை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.  

 இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டில் சடலமாக கிடந்த தனபாக்கியத்தின் உடலை மீட்டு  ஈரோடு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் தாயை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய இரண்டாவது மகன் சந்தோஷ்குமாரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சொத்து பிரச்சனையின் காரணமாக இரண்டாவது மகன் தன் தாயை சுத்தியலால்  தாக்கி  கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com