“கணவரின் நண்பருடன் உல்லாசத்தில் இருந்த பெண்” - மனைவியை கண்டித்த வாலிபர்.. கொன்று உடலை கால்வாயில் வீசிய கள்ளக்காதலன்!

நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்து...
“கணவரின் நண்பருடன் உல்லாசத்தில் இருந்த பெண்” - மனைவியை கண்டித்த வாலிபர்.. கொன்று உடலை கால்வாயில் வீசிய கள்ளக்காதலன்!
Published on
Updated on
1 min read

நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பரிமளா என்பவருக்கும் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில் இருவரும் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள காசிப்பிள்ளை பகுதியில் வீடு எடுத்து வசித்து வந்தனர். ஸ்ரீதர் அதே பகுதியில் உள்ள உணவகத்தில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்திருக்கிறார். மேலும் இவரது மனைவி பரிமளா வீட்டின் அருகில் சொந்தமாக இ சேவை மையம் வைத்து நடத்தி வருகிறார்.

ஸ்ரீதருக்கு அவர் வேலை செய்யும் உணவகத்திற்கு அவ்வப்போது உணவருந்த வரும் பெருந்துறையை சேர்ந்த ஓட்டுநர் கார்த்திகேயன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் நெருங்கி பாளை நண்பர்களான நிலையில் கார்த்திகேயன் அடிக்கடி ஸ்ரீதர் வீட்டிற்கு சென்று வந்திருக்கிறார். இதனால் பரிமளாவுக்கு கார்த்திகேயனுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இந்தப் பழக்கமானது நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது.

பரிமளாவின் கணவர் ஸ்ரீதருக்கு குடிப்பழம் உள்ள நிலையில் அவ்வப்போது கார்த்திகேயன் மற்றும் ஸ்ரீதர் இருவரும் சேர்ந்து அவரது வீட்டில் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது ஸ்ரீதருக்கு அதிகமாக மது ஊற்றிக் கொடுத்துவிட்டு கார்த்திகேயன் அவரது வீட்டிலேயே பரிமளாவுடன் தனிமையில் இருப்பதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். அதே போல ஒரு நாள் மது அருந்திவிட்டு பரிமளாவுடன் கார்த்திகேயன் தனிமையில் இருந்துள்ளார் அப்போது போதை தெளிந்த ஸ்ரீதர் இருவரும் தனிமையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.

பின்னர் இருவரையும் கண்டித்த ஸ்ரீதர் அவரது மனைவியை தகாத வார்த்தைகளால் பேசி திட்டியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து மறுநாள் ஸ்ரீதரிடம் மன்னிப்பு கேட்ட கார்த்திகேயன் அவரை மது அருந்த தனியாக அழைத்து சென்று கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார். பின்னர் பரிமளாவுக்கு போன் செய்து தகவல் தெரிவித்து சாக்கு சாக்கு மூட்டை எடுத்து வர கூறியுள்ளார். இதனை தொடர்ந்து இருவரும் சேர்ந்து ஸ்ரீதரின் உடலை சாக்கு மூட்டையில் போட்டு அப்பகுதியில் இருந்த கால்வாயில் வீசிவிட்டு தப்பி சென்றிருக்கின்றனர்.

சாக்கு மூட்டையில் இருந்து துர்நாற்றம் வீசுவதை அறிந்த அப்பகுதி மக்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சாக்கு மூட்டையை திறந்து பார்த்த போது ஸ்ரீதர் சடலத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை மனைவி கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து பரிமளா மற்றும் கார்த்திகேயனை கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com