நாட்டைக் காக்கும் 'இராணுவ அதிகாரி' என்று நம்பிய பெண் மருத்துவர்... உண்மையில் வெறும் டெலிவரி செய்யும் நபரா? வீட்டிற்கே சென்று செய்த 'அசிங்கம்'

நாட்டிற்காகப் பணிபுரிவதாகவும் இவர் கூறியதால், அந்தப் பெண் மருத்துவர் இவரை நம்பியுள்ளார்...
நாட்டைக் காக்கும் 'இராணுவ அதிகாரி' என்று நம்பிய பெண் மருத்துவர்... உண்மையில் வெறும் டெலிவரி செய்யும் நபரா? வீட்டிற்கே சென்று செய்த 'அசிங்கம்'
Published on
Updated on
1 min read

புதுதில்லியில் உள்ள சஃப்தர்ஜங் மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு பெண் மருத்துவரை, இராணுவ அதிகாரி போல வேடமிட்ட ஒரு நபர் பாலியல் வன்கொடுமை செய்திருக்கும் அதிர்ச்சிகரமான சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மக்கள் மத்தியில் இராணுவத்தினர் மீது உள்ள மதிப்பையும், மரியாதையையும் தவறாகப் பயன்படுத்தி, ஒரு மர்ம நபர் இந்தப் பயங்கரச் செயலை அரங்கேற்றியுள்ளார். இது குறித்துக் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றது.

எப்படிப் பழக்கம் ஏற்பட்டது?

இந்தச் சம்பவத்தின் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் நபரின் பெயர் பூபேந்தர். காவல்துறையின் தகவலின்படி, பூபேந்தர் ஒரு டெலிவரி ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் சஃப்தர்ஜங் மருத்துவமனையில் பணிபுரியும் இந்தப் பெண் மருத்துவரிடம் தான் ஒரு இராணுவ அதிகாரி என்று பொய் கூறிப் பழக்கம் ஏற்படுத்தியுள்ளார். இராணுவத்தில் உயர் பதவியில் இருப்பதாகவும், நாட்டிற்காகப் பணிபுரிவதாகவும் இவர் கூறியதால், அந்தப் பெண் மருத்துவர் இவரை நம்பியுள்ளார். இந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே இவர்கள் இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது.

இராணுவ அதிகாரி என்ற போலிப் பிம்பத்தை உறுதியாக நம்பிய அந்தப் பெண் மருத்துவர், பூபேந்தருடன் சில முறை வெளியே சென்று பழகியுள்ளார். இந்நிலையில், ஒருநாள் பூபேந்தர் அந்த பெண் மருத்துவர் வீட்டிற்குச் சென்று, அங்கு வைத்து, அவர் மருத்துவரின் விருப்பத்திற்கு மாறாக மிரட்டிப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இந்தக் கொடூரச் சம்பவத்திற்குப் பிறகு, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்தப் பெண் மருத்துவர், உடனடியாகக் காவல் நிலையத்தை நாடிப் புகார் அளித்துள்ளார். தனக்குப் பூபேந்தர் இராணுவ அதிகாரி என்று பொய் சொல்லிப் பழகியதாகவும், பின்னர் அச்சுறுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தனது புகாரில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் புகாரைத் தொடர்ந்து விரைந்து செயல்பட்ட காவல்துறையினர், குற்றம் சாட்டப்பட்ட பூபேந்தரை உடனடியாகக் கைது செய்தனர். விசாரணையில், அவர் எந்த ஒரு இராணுவ அதிகாரியும் இல்லை என்பதும், அவர் ஒரு சாதாரண டெலிவரி ஊழியர் என்பதும் உறுதியாகியது. இந்தப் பொய்யான தகவலை வைத்துத்தான் அவர் அந்த மருத்துவரை அணுகி, இந்தச் செயலைச் செய்துள்ளார். அவர் மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com