'துரதிஷ்டம்' என நம்பி குழந்தையை நடுரோட்டில் விட்ட தம்பதி! சினிமா பாணியில் நடக்கும் குழந்தை திருட்டு

மத்தியப் பிரதேச நெடுஞ்சாலையில் தனியாகக் கண்டெடுக்கப்பட்ட சிறு குழந்தை.
குழந்தையை தேசிய நெடுஞ்சாலையில் விட்டுச்சென்ற தம்பதிகள்
குழந்தையை தேசிய நெடுஞ்சாலையில் விட்டுச்சென்ற தம்பதிகள் குழந்தையை தேசிய நெடுஞ்சாலையில் விட்டுச்சென்ற தம்பதிகள்
Published on
Updated on
1 min read

தொழிலதிபர் தம்பதியினர், இரண்டரை வயது சிறுமியை ஒரு லட்சம் ரூபாய்க்கு வாங்கி, அக்குழந்தை தங்களுக்குத் துரதிர்ஷ்டத்தைக் கொண்டு வந்துவிட்டதாக நம்பி, அந்த பச்சிளம்குழந்தையை ஒரு நெடுஞ்சாலையில் கைவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.

குனாவைச் சேர்ந்த தொழிலதிபர் தம்பதியினர், ஏப்ரல் 18 அன்று ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள சோயின்கலான் அருகே தேசிய நெடுஞ்சாலை-552-ல் குழந்தையைக் கைவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இதையடுத்து, டயல்-112 அழைப்பு மூலம் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு அந்தக் குழந்தை தனியாக சாலையில் காணப்பட்டது. மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு, உள்ளூர் குழந்தைகள் நலக் குழு அக்குழந்தையைப் பராமரிப்பில் எடுத்துக்கொண்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஆனால் அடுத்தடுத்து புலனாய்வாளர்கள் கண்டுபிடித்தது திரைப்படத்தை மிஞ்சியதாக இருந்தது. சிசிடிவி காட்சிகள் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்கள் மூலம் போபாலில் இருந்த அந்தத் தம்பதியினர் கண்டுபிடிக்கப்பட்டபோது, ​​ஆரம்பத்தில் அந்தக் குழந்தை சட்டப்பூர்வமாகத் தத்தெடுக்கப்பட்டதாக கூறினர். தொடர்ச்சியான விசாரணையின் கீழ் அந்தக் கூற்று பொய்யானது என்றும், இறுதியில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், இந்தூரில் உள்ள ஒரு அழகு நிலைய உரிமையாளர் மற்றும் அவரது கூட்டாளிகளிடமிருந்து அந்தக் குழந்தை தத்தெடுக்கப்படாமல், விலைக்கு வாங்கப்பட்டது என்பதை ஒப்புக்கொண்டுள்ளனர்.

இந்த மோசடிக் கும்பல் நலிவடைந்த குடும்பங்களிலிருந்து குழந்தைகளைத் திட்டமிட்டுத் தேர்ந்தெடுத்து, 'தத்தெடுப்பு' என்ற போர்வையில் அவர்களை வாங்க விரும்புவோருக்கு விற்பனை செய்வதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த மிகப்பெரிய வலையமைப்புடன் தொடர்புடைய பல சந்தேகத்திற்கு இடமான நபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளதாகவும், குழந்தையின் உயிரியல் பெற்றோரை அடையாளம் காணவும், போலீசார் தீவிர முயற்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாதுகாப்பற்ற சூழலில் ஒரு குழந்தையைக் கைவிட்டதாக முதலில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுடன், அதன் பின்னர் காவல்துறையினர் அந்தத் தம்பதியினர் மீது குழந்தைக் கடத்தல் மற்றும் சிறார் நீதிச் சட்டம் தொடர்பான பிரிவுகளையும் சேர்த்துள்ளனர். அந்த அறிக்கையின்படி, ஒரு உள்ளூர் நீதிமன்றம் அவர்களை மேலதிக விசாரணைக்காகக் காவல் துறை காவலில் வைத்துள்ளது. மாதம் 20,000 ரூபாய் சம்பளத்தில் குழந்தையின் பராமரிப்பாளராகத் தான் பணியமர்த்தப்பட்டதாக போபாலைச் சேர்ந்த ஒரு பெண் காவல்துறையிடம் தெரிவித்ததையும் அந்த அறிக்கை மேற்கோள் காட்டியுள்ளது. அந்தத் தம்பதியரின் வீட்டில் குழந்தை உடல்ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதாகவும், தனது சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டதால் இறுதியில் அவள் வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும் அத பெண் குற்றம் சாட்டினார். மிக முக்கியமாக, அந்தக் குழந்தை எப்படி, எங்கிருந்து வந்தது? என்பதை அந்தத் தம்பதியர் அந்த பெண்ணிடம் தெரிவிக்கவில்லை என்றும் அவர்கள் யாரிடமும் இதைப்பற்றி கேட்கவில்லை என்று கூறப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com