“பச்சிளம் குழந்தையை இரக்கமின்றி கொன்ற தாய்” - டிஸ்யூவை வாயில் அடைத்த கொடூரம்.. தன்னை விட குழந்தை மீது கணவர் அன்பு காட்டியதாக வாக்குமூலம்!

குழந்தையின் தலையை சுவற்றில் அடித்து கொலை செய்ய முயன்றுள்ளார் ஆனால் குழந்தை அதில் சாகாமல் அழுதுள்ளது
“பச்சிளம் குழந்தையை இரக்கமின்றி கொன்ற தாய்” - டிஸ்யூவை வாயில் அடைத்த கொடூரம்.. தன்னை விட குழந்தை மீது கணவர் அன்பு காட்டியதாக வாக்குமூலம்!
Admin
Published on
Updated on
3 min read

குமரி மாவட்டம் கருங்கல் அருகே பாலூர் பகுதியை சேர்ந்தவர் 20 வயதுடைய பெனிட்டா ஜெய. அதே ஊரில் பள்ளி படிப்பை முடித்த பெனிட்டா ஜெயாவிற்கு இன்ஸ்டகிராம் மூலம் திண்டுக்கல்லை சேர்ந்த செல்வி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் செல்வியின் உதவியினால் பெனிட்டா ஜெயா சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார். பின்னர் சில மாதங்களுக்கு பிறகு இடமாறுதல் ஆகி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்துள்ளார்.

அப்போது இன்ஸ்டாகிராம் தோழியான செல்வியின் கணவரின் நண்பரான 21 வயதுடைய கார்த்திக் என்பவருடன் பெனிட்டா ஜெயாவிற்கு காதல் ஏற்பட்டு கடந்த ஒரு வருடத்திற்கு முன் இருவரும் திருமணம் செய்துள்ளனர். பெனிட்டா ஜெய காதல் திருமணம் செய்தது பெனிட்டா ஜெயாவின் பெற்றோருக்கு பிடிக்காமல் போக அவர் கணவருடன் தங்கி இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் பெனிட்டா ஜெயா கர்ப்பம் தரித்து கடந்த 42 தினங்களுக்கு முன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

குழந்தை பிறந்த கையோடு பெனிட்டா ஜெயா தனது கணவர் கார்த்திக்குடன் பாலூர் பகுதியில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு வந்து தங்கி இருந்துள்ளார். இந்த நிலையில் இரண்டு தினங்களுக்கு முன் கணவர் கார்த்திக் தனது தாயாரை பார்க்க திண்டுக்கல் சென்று விட்டு மறுநாள் காலை மனைவியின்

வீட்டிற்கு வந்த கார்த்திக் நேராக தனது குழந்தையை தூக்கி கொஞ்சுவதற்கு சென்றார் அப்போது குழந்தை பேச்சு மூச்சின்றி கிடந்துள்ளது மேலும் குழந்தையின் தலை நெற்றியில் காயமும் இருந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த கார்த்திக் “குழந்தை தலையில் என்ன காயம்” என்று கேட்டுள்ளார் அதற்கு பெனிட்டா ஜெயா குழந்தைக்கு பால் கொடுக்கும் போது காலால் உந்தி கீழே விழுந்தது இதில் காயம் ஏற்பட்டது என்று நாடகமாடி உள்ளார்.

Admin

மேலும் குழந்தை அசைவின்றி கிடக்கிறது என்று கேட்டதற்கு பால் குடித்த போது நாசியில் புரை ஏறி இருக்கலாம் என்று சாதரணமாக கூறி உள்ளார். உடனே கார்த்திக் குழந்தையை தூக்கிக் கொண்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டது என தெரிவித்தனர். இதனையடுத்து கருங்கல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது

தகவல் அறிந்து தனியார் மருத்துவமனைக்கு சென்ற போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு குழந்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்த போது குழந்தையின் மூச்சுக் குழாயில் டிஸ்யூ பேப்பர் சிக்கி இருந்தது தெரியவந்தது இதனையடுத்து கொலை வழக்காக மாற்றம் செய்து போலீசார் பெனிட்டா ஜெயாவை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையின் போது பல திடுக்கிடும் தகவல்களை கூறி போலீசாரை அதிர்ச்சியடைய செய்துள்ளார் பெனிட்டா ஜெயா

அதாவது “தங்களுக்கு குழந்தை பிறக்கும் வரை கணவன் தன்னை அன்பாக கவனித்து வந்ததாகவும் மாமியாரும் நன்றாக பார்த்து வந்ததாகவும் பெண் குழந்தை பிறந்து கணவரின் வீட்டிற்கு சென்ற நாளில் இருந்து மாமியார் தன்னை ராசி இல்லாதவள் என்று தொடர்ந்து திட்டி வந்ததாகவும் இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பெனிட்டா ஜெயா கணவருடன் குழந்தையும் எடுத்து கொண்டு தனது தாயார் வீட்டிற்கு வந்து இருந்ததாகவும் அப்போதும் கணவர் தன்னிடம் அன்பாக இல்லாமல் குழந்தையிடம் மட்டுமே அதிக நேரத்தை செலவிட்டு வந்ததாகவும் இதனால் குழந்தை மீது தனக்கு ஆத்திரம் ஏற்பட்டது” என தெரிவித்து உள்ளார்.

Admin

இந்த நிலையில் இரண்டு தினங்களுக்கு முன் கார்த்திக் தனது தாயாரை பார்ப்பதற்காக திண்டுக்கல்லுக்கு சென்றுள்ளார். இதுதான் சரியான தருணம் என்று காத்திருந்த பெனிட்டா ஜெயா குழந்தையின் தலையை சுவற்றில் அடித்து கொலை செய்ய முயன்றுள்ளார் ஆனால் குழந்தை அதில் சாகாமல் அழுதுள்ளது.

இதனையடுத்து குழந்தையை சத்தம் இல்லாமல் கொல்வது எப்படி என்று சிந்தித்துள்ளார் பெனிட்டா ஜெயா. பின்னர் குழந்தையின் தொண்டை பகுதியில் சுவாச குழாயில் டிஸ்யூ பேப்பரை சுருட்டி அடைத்து வைத்துள்ளார் இதில் குழந்தை மூச்சடக்கி உயிரிழந்து உள்ளது. பின்னர் கணவரிடம் குழந்தை பால் குடிக்கும் போது நாசியில் புரை ஏறி இறந்ததாக தெரிவித்து நாடகமாடியதை ஒப்புக்கொண்டுள்ளார் இதையடுத்து போலீசார் பெனிட்டா ஜெயாவை கைது செய்து சிறையில் அடைத்த தோடு குழந்தையின் உடலை தந்தையிடம் ஒப்படைத்தனர் இந்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com