“வந்தேறி என கேலி செய்த குடும்பம்” - வீட்டோடு மாப்பிள்ளையான கணவர்.. மனைவியை கொன்று சடலத்துடன் தூங்கிய கொடூரம்!

ஆத்திரமடைந்த டார்வின் தூங்கிக்கொண்டிருந்த மனைவியின் கழுத்தில் துணியை போட்டு
“வந்தேறி என கேலி செய்த குடும்பம்” - வீட்டோடு மாப்பிள்ளையான கணவர்.. மனைவியை கொன்று சடலத்துடன் தூங்கிய கொடூரம்!
Published on
Updated on
2 min read

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள படுவூர் பகுதியை சேர்ந்தவர் 39 வயதான நித்திய செல்வி. இவருக்கு வட்டம் பகுதியை சேர்ந்த 46 வயதான டார்வின் என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. தற்போது இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகனும் 7 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

நித்திய செல்வி வசதியான குடும்பத்தை சேர்ந்தவர் என்பதாலும் அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தாலும் டார்வினை நித்திய செல்வி குடும்பத்தார் வீட்டோடு மாப்பிள்ளையாக திருமணம் செய்து அழைத்து வந்துள்ளனர். வீட்டோடு மாப்பிள்ளையாக வந்ததால் டார்வின் மனதளவில் துன்பங்களை அனுபவித்து வந்துள்ளார்.

இதனால் டார்வின் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக மாறியுள்ளார். ஏற்கனேவே டார்வினை மதிக்கமால் இருந்த குடும்பத்தார் குடிப்பழக்கத்தினால் மேலும் உதாசீனப்படுத்தி உள்ளனர். நித்திய செல்வி எப்போதும் டார்வினை மதிக்காமல் திட்டிக்கொண்டே இருந்ததாக சொல்லப்படுகிறது. அது மட்டுமல்லாமல் நித்திய செல்வியின் மொத்த குடும்பமும் டார்வினை “வந்தேறி” என கூறி கேலி செய்து வந்துள்ளனர்.

இதனால் மிகுந்த மன உளைச்சல் அடைந்த டார்வின் நேற்று காலை குடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மீண்டும் நித்திய செல்வி டார்வினை கடுமையாக வசை பாடியுள்ளார், இதில் ஆத்திரமடைந்த டார்வின் தூங்கிக்கொண்டிருந்த மனைவியின் கழுத்தில் துணியை போட்டு நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் கட்டிலில் மனைவின் சடலம் இருந்த நிலையில் கீழே தரையில் படுத்து உறங்கியுள்ளார்.

Admin

காலை 8 மணிக்கு அறைக்குள் சென்ற கணவன் மனைவி இருவரும் இரவு வெகு நேரம் ஆகியும் வெளியில் வராததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் அறைக்குள் சென்று பார்த்த போது நித்திய செல்வி கட்டில் மீதும் டார்வின் தரையிலும் இருந்துள்ளனர். நித்திய செல்வியை எழுப்ப அருகில் சென்ற உறவினர் அவரது கழுத்தில் இருந்த காயத்தை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

மேலும் அவர் உயிரிழந்ததை அறிந்த உறவினர் அக்கம் பக்கத்தினரை அழைத்துள்ளார். இந்நிலையில் தூக்கத்தில் இருந்து எழுந்த டார்வின் மனைவியின் சடலத்தின் அருகில் அமர்ந்து பார்த்துக் கொண்டு இருந்துள்ளார்.இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நித்திய செல்வி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

டார்வினை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். கணவன் மனைவியை கொன்று சடலத்துடன் படுத்து உறங்கிய சம்பவம் அப்பகுதி மக்கள் மற்றும் உறவினர்களிடையே பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com